முகப்பு |
நனை முதிர் ஞாழற் |
397. நெய்தல் |
நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ |
||
நெய்தல் மா மலர்ப் பெய்த போல |
||
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப! |
||
தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு, |
||
'அன்னாய்!' என்னும் குழவி போல, |
||
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும், |
||
நின் வரைப்பினள் என் தோழி; |
||
தன் உறு விழுமம் களைஞரோ இலளே. | உரை | |
வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது. - அம்மூவன் |