முகப்பு |
நிரை வளை முன்கை |
335. குறிஞ்சி |
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர் |
||
இருங் கல் வியல் அறைச் செந் தினை பரப்பிச் |
||
சுனை பாய் சோர்வு இடை நோக்கி, சினை இழிந்து, |
||
பைங் கண் மந்தி பார்ப்பொடு கவரும் |
||
வெற்பு அயல் நண்ணியதுவே-வார் கோல் |
||
வல் விற் கானவர் தங்கைப் |
||
பெருந் தோட் கொடிச்சி இருந்த ஊரே. | உரை | |
இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது. - இருந்தையூர்க் கொற்றன் புலவன் |