முகப்பு |
நீர் நீடு ஆடின் |
354. மருதம் |
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்; |
||
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்; |
||
தணந்தனைஆயின், எம் இல் உய்த்துக் கொடுமோ- |
||
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க் |
||
கடும் பாம்பு வழங்கும் தெருவில் |
||
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே? | உரை | |
பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- கயத்தூர் கிழான் |