முகப்பு |
நெடிய திரண்ட தோள் |
252. குறிஞ்சி |
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த |
||
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன் |
||
வருவதோர் காலை, இன் முகம் திரியாது, |
||
கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி, |
||
'மடவைமன்ற நீ' எனக் கடவுபு |
||
துனியல் வாழி-தோழி!-சான்றோர் |
||
புகழும் முன்னர் நாணுப; |
||
பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே? | உரை | |
தலைமகன் வரவறிந்த தோழி, 'அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம் பெருமாட்டி தீயன கடிந்து நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி உரைத்தது.- கிடங்கில் குலபதி நக்கண்ணன் |