முகப்பு |
நெடுநீர் ஆம்பல் |
352. பாலை |
நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன |
||
கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை |
||
அகல்இலைப் பலவின் சாரல் முன்னி, |
||
பகல் உறை முது மரம் புலம்பப் போகும் |
||
சிறு புன் மாலை உண்மை |
||
அறிவேன்-தோழி-! அவர்க் காணா ஊங்கே. | உரை | |
பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது. - கடியலூர் உருத்திரங் கண்ணனார் |