முகப்பு |
நெய் கனி குறும்பூழ் |
389. குறிஞ்சி |
நெய் கனி குறும்பூழ் காயம் ஆக |
||
ஆர்பதம் பெறுக-தோழி! அத்தை- |
||
பெருங் கல் நாடன் வரைந்தென, அவன் எதிர் |
||
'நன்றோ மகனே?' என்றனென்; |
||
'நன்றே போலும்' என்று உரைத்தோனே. | உரை | |
தலைமகன் குற்றேவல் மகனால் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- வேட்ட கண்ணன் |