முகப்பு |
நெறி இருங் கதுப்பொடு |
190. முல்லை |
நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி, |
||
செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர் |
||
அறிவர்கொல் வாழி-தோழி!-பொறி வரி |
||
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய |
||
நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள், |
||
நல் ஏறு இயங்குதொறு இயம்பும் |
||
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே? | உரை | |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பூதம்புல்லன். |