முகப்பு |
நோம் என் நெஞ்சே...புன் புலத் |
202. மருதம் |
நோம், என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே! |
||
புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக் |
||
கட்கு இன் புது மலர் முட் பயந்தாஅங்கு, |
||
இனிய செய்த நம் காதலர் |
||
இன்னா செய்தல் நோம், என் நெஞ்சே! | உரை | |
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - அள்ளூர் நன்முல்லை |