முகப்பு |
பாசவல் இடித்த |
238. மருதம் |
பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை |
||
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி, |
||
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் |
||
தொண்டி அன்ன என் நலம் தந்து, |
||
கொண்டனை சென்மோ-மகிழ்ந!-நின் சூளே. | உரை | |
தலைமகன் பரத்தையின் மறுத்தந்து, வாயில் வேண்டித் தோழியிடைச் சென்று, தெளிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது. - குன்றியன் |