முகப்பு |
பாலும் உண்ணாள் |
396. நெய்தல் |
பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள், |
||
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே, |
||
எளிது என உணர்ந்தனள்கொல்லோ-முளி சினை |
||
ஓமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல் |
||
வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன் |
||
மழை முழங்கு கடுங் குரல் ஓர்க்கும் |
||
கழை திரங்கு ஆர் இடை, அவனொடு செலவே? | உரை | |
மகட் போக்கிய தாய் உரைத்தது, - கயமனார். |