முகப்பு |
பெருந்தண் மாரிப் |
94. முல்லை |
பெருந் தண் மாரிப் பேதைப் பித்திகத்து |
||
அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே; |
||
யானே மருள்வென்?-தோழி!-பானாள் |
||
இன்னும் தமியர் கேட்பின், பெயர்த்தும் |
||
என் ஆகுவர்கொல், பிரிந்திசினோரே?- |
||
அருவி மா மலைத் தத்தக் |
||
கருவி மா மழைச் சிலைதரும் குரலே. | உரை | |
பருவங் கண்டு ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடத் தலைமகள் சொல்லியது. - கதக்கண்ணன் |