முகப்பு |
மட்டம் பெய்த |
193. முல்லை |
மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன |
||
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை, |
||
தட்டைப் பறையின், கறங்கும் நாடன் |
||
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின் |
||
மணந்தனன்மன் எம் தோளே; |
||
இன்றும், முல்லை முகை நாறும்மே. |
உரை | |
தோழி கடிநகர் புக்கு, 'நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி உரைத்தது - அரிசில் கிழார் |