முகப்பு |
மண்ணிய சென்ற ஒள்நுதல் |
292.குறிஞ்சி |
மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை |
||
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு |
||
ஒன்பதிற்று-ஒன்பது களிற்றொடு, அவள் நிறை |
||
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான், |
||
பெண் கொலை புரிந்த நன்னன் போல, |
||
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!- |
||
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென, |
||
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே. | உரை | |
தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது. - பரணர் |