முகப்பு |
மரம் கொல் கானவன் |
214. குறிஞ்சி |
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய |
||
பிறங்கு குரல் இறடி காக்கும், புறம் தாழ் |
||
அம் சில் ஓதி, அசை இயல், கொடிச்சி |
||
திருந்து இழை அல்குற்குப் பெருந் தழை உதவிச் |
||
செயலை முழுமுதல் ஒழிய, அயலது |
||
அரலை மாலை சூட்டி, |
||
ஏமுற்றன்று-இவ் அழுங்கல் ஊரே. | உரை | |
தோழி, வெறியாட்டு எடுத்துக் கொண்ட இடத்து, அறத்தொடு நின்றது. - கூடலூர் கிழார் |