முகப்பு |
மலை இடையிட்ட |
203. மருதம் |
மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்; |
||
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்; |
||
கண்ணின் காண நண்ணுவழி இருந்தும், |
||
கடவுள் நண்ணிய பாலோர் போல, |
||
ஒரீஇனன் ஒழுகும் என்னைக்குப் |
||
பரியலென்மன் யான், பண்டு ஒரு காலே. | உரை | |
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நெடும்பல்லியத்தன் |