மன்ற மராஅத்த

87. குறிஞ்சி
'மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம்' என்ப; யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்;
பசைஇப் பசந்தன்று, நுதலே;
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று, தட மென் தோளே.

உரை

தலைமகள் தெய்வத்திற்குப் பராஅயது. - கபிலர்