முகப்பு |
மனை உறை கோழிக் |
139. மருதம் |
மனை உறை கோழி குறுங் கால் பேடை, |
||
வேலி வெருகினம் மாலை உற்றென, |
||
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய |
||
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு |
||
இன்னாது இசைக்கும் அம்பலொடு |
||
வாரல், வாழியர்!-ஐய!-எம் தெருவே. |
உரை | |
வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - ஒக்கூர் மாசாத்தியார். |