மால்வரை இழிதரும்

95. குறிஞ்சி
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற்
சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள்
நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே.

உரை

தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கபிலர்