முகப்பு |
மான் ஏறு மடப்பினை |
319. முல்லை |
மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து, |
||
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும், |
||
கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி, |
||
மை அணி மருங்கின் மலையகம் சேரவும், |
||
மாலை வந்தன்று, மாரி மா மழை; |
||
பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர் |
||
இன்னும் வாரார்ஆயின், |
||
என் ஆம், தோழி நம் இன் உயிர்நிலையே | உரை | |
பருவ வரவின்கண் வேறுபட்ட கிழத்தி வன்புறை எதிர் அழிந்து சொற்றது.- தாயங் கண்ணன் |