முகப்பு |
மின்னுச் செய் கருவிய |
205. நெய்தல் |
மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க |
||
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு, |
||
பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி, |
||
கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப, |
||
இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்; |
||
யாங்கு அறிந்தன்றுகொல்-தோழி!-என் |
||
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே? | உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன் |