கடவுள் வாழ்த்து
 
1நீல மேனி வாலிழை பாகத்
தொருவ னிருதா ணிழற்கீழ்
மூவகை யுலகு முகிழ்த்தன முறையே.
வாழ்த்து.
பாரதம் பாடிய பெருந்தேவனார்.
 
குறிப்பு. வாலிழை -தூய அணிகலங்களையுடைய உமாதேவியார், ஒருவன்- சிவபெருமான், முகிழ்த்தன-தோன்றின.
 
(மேற்கோளாட்சி) ‘ஆசிரியப்பா மூன்றடியான் வந்தது’
           (தொல், செய், 157, பேர். ந.)
 

(பிரதி பேதம்) 1 ‘மா அமேனி, ‘ ‘ மாமலர் மேனி ‘