| முறைப்பட வினையை முடித்துக் காட்டிப் பாட்டிடை மெய்ப்பாடு பாங்குறத் தெரித்துப் | 30. | பாற்பட நூலின் யாப்புற வுரைத்த நாற்பெயர் பெயரா நடப்பக் கிடத்திப் போற்ற வின்னுரை பொருள்பெற 1விளம்பியும், வையம் புகழ்ந்து மணிமுடி சூட்டிய பொய்யில் வான்கதை பொதிந்த செந்தமிழ்ச் | 35 | சிந்தா மணியைத் தெண்கடன் மாநிலம் வந்தா தரிப்ப 2வண்பெரு வஞ்சிப் பொய்யா மொழிபுகழ் மையறு காட்சித் திருத்தரு முனிவன் கருத்திது வென்னப் பருப்பொருள் கடிந்து 3பொருட்டொடர்ப் படுத்து | 40. | வினையொடு முடியப் புனையுரை யுரைத்தும், நல்லறி வுடைய தொல்பே ராசான் கல்வியுங் காட்சியுங் காசினி யறியப் பொருடெரி குறுந்தொகை யிருபது பாட்டிற் கிதுபொரு ளென்றவ னெழுதா தொழிய | 45 | விதுபொரு ளென்றதற் கேற்ப வுரைத்தும், தண்டமிழ் 4தெரித்த வண்புகழ் மறையோன் வண்டிமிர் சோலை மதுரா புரிதனி லெண்டிசை விளங்க வந்த வாசான் பயின்ற கேள்விப் பாரத்து வாச | 50 |
னான்மறை துணிந்த நற்பொரு ளாகிய தூய ஞான நிறைந்த சிவச்சுடர் தானே யாகிய தன்மை யாள னவின்ற வாய்மை நச்சினார்க் கினிய 5னிருவினை கடியு மருவியம் பொதியின் | 55 | மருவிய குறுமுனி தெரிதமிழ் விளங்க வூழி யூழி காலம். வாழி வாழியிம் மண்மிசை யானே. |
(பிரதிபேதம்) 1அமைத்தும், 2வரைபெரு வஞ்சிப், 3 பொருட்டொடர் படுத்து, 4தெரிந்தவண் புகழ், 5அருவினைகடியும்.
|