உரைச்சிறப்புப்பாயிரம் 965


தொல்காப் பியத்திற் றொகுத்த பொருளனைத்து
1மெல்லார்க்கு மொப்ப வினிதுரைத்தான் - சொல்லார்
2மதுரைநச்சி னார்க்கினியன் மாமறையோன் கல்விக்
கதிரின் சுடரெறிப்பக் கண்டு.
பச்சைமா லனைய மேகம் பௌவநீர் பருகிக் கான்ற
வெச்சினாற் றிசையு முண்ணு 3மமிழ்தென வெழுநா வெச்சின்
மெச்சிநா ணாளும் விண்ணோர் 4மிசைகுவர் வேத போத
5னச்சினார்க் கினிய னெச்சி னறுந்தமிழ் நுகர்வர் நல்லோர்.

6கலித்தொகைக்கு
ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியன் செய்த
உரை முற்றும்.


(பிரதிபேதம்) 1எல்லார்க்கு மேற்பவினிது, 2மதுரா புரியினியான் மாமறையோ னின்பக், கதிரார் சுடர், 3அமிர்தென, 4நுகர்குவர், 5நச்சினார்க் கினியா னாவி னல்லுரை நவில்வர் நல்லோர், 6கலித்தொகைக்கு நச்சினாற்கினியர்.