யானை(களிறு, பிடி, வேழம், ஒருத்தல், நாகம்) |
'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல், |
|
உருவக் குதிரை மழவர் ஓட்டிய |
|
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி, |
|
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண், |
|
5 |
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய |
கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம் |
|
மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த |
|
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப் |
|
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக, |
|
10 |
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், |
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு, |
|
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின், |
|
உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும் |
|
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய, |
|
15 |
சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை |
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச் |
|
சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று, |
|
உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன் |
|
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே? |
|
பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது-மாமூலனார் | |
உரை |
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை, |
|
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை, |
|
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை, |
|
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன், |
|
5 |
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் |
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம், |
|
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு, |
|
வேழ வெண் புணை தழீஇ, பூழியர் |
|
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு, |
|
10 |
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய, |
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து, |
|
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின், |
|
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என, |
|
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம் |
|
15 |
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! |
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து, |
|
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
|
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய், |
|
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும், |
|
20 |
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் |
இளமை சென்று தவத் தொல்லஃதே; |
|
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே? |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர் | |
உரை |
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த |
|
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை |
|
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின், |
|
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும், |
|
5 |
அரிய அல்லமன் இகுளை! 'பெரிய |
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை |
|
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் |
|
கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு |
|
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில், |
|
10 |
படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய, |
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் |
|
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு, |
|
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது, |
|
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல, |
|
15 |
துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் |
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ, |
|
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம், |
|
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார். | |
உரை |
கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுகின், |
|
வில்லோர் தூணி வீங்கப் பெய்த |
|
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை, |
|
செப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு, |
|
5 |
இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய் |
உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு, |
|
ஆலி வானின் காலொடு பாறி, |
|
துப்பின் அன்ன செங் கோட்டு இயவின், |
|
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் |
|
10 |
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் |
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய |
|
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி, |
|
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும் |
|
குன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து, |
|
15 |
ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, |
துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின் |
|
எம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண் |
|
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ, |
|
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி, |
|
20 |
கன்று புகு மாலை நின்றோள் எய்தி, |
கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி, |
|
பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி, |
|
தொடிக் கை தைவரத் தோய்ந்தன்றுகொல்லோ |
|
நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல், |
|
25 |
அம் தீம் கிளவிக் குறுமகள் |
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே? |
|
வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
யாயே, கண்ணினும் கடுங் காதலளே; |
|
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி சிவப்ப, |
|
எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்; |
|
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின், |
|
5 |
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; |
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும், |
|
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை, |
|
விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார், |
|
குறவர் ஊன்றிய குரம்பை புதைய, |
|
10 |
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் |
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம், |
|
மழை படு சிலம்பில் கழைபட, பெயரும் |
|
நல் வரை நாட! நீ வரின், |
|
மெல்லியல் ஓரும் தான் வாழலளே. |
|
பகற்குறி வாராநின்ற தலைமகன் தோழியால் செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரவுக் குறி வாரா வரைவல்' என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும், |
|
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத் |
|
தெறல் அரு மரபின் கடவுட் பேணி, |
|
குறவர் தந்த சந்தின் ஆரமும், |
|
5 |
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் |
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் |
|
குழியில் கொண்ட மராஅ யானை |
|
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது, |
|
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும், |
|
10 |
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன் |
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின், |
|
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு, |
|
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து, |
|
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின், |
|
15 |
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட |
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை, |
|
கவவு இன்புறாமைக் கழிக வள வயல், |
|
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற |
|
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல் |
|
20 |
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர, |
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை, |
|
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த |
|
வெண் குருகு நரல, வீசும் |
|
நுண் பல் துவலைய தண் பனி நாளே! |
|
பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது; உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச் சாத்தனார் | |
உரை |
எம் வெங் காமம் இயைவது ஆயின், |
|
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர் |
|
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த |
|
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித் |
|
5 |
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, |
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின் |
|
செறிந்த சேரிச் செம்மல் மூதூர், |
|
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல |
|
தோழிமாரும் யானும் புலம்ப, |
|
10 |
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் |
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச் |
|
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி, |
|
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத் |
|
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க, |
|
15 |
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி, |
வன் கை எண்கின் வய நிரை பரக்கும் |
|
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு |
|
குன்ற வேயின் திரண்ட என் |
|
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே! |
|
மகட்போக்கிய தாய்சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும், |
|
இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும், |
|
'உயங்கின்று, அன்னை! என் மெய்' என்று அசைஇ, |
|
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென, |
|
5 |
முயங்கினள் வதியும்மன்னே! இனியே, |
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள், |
|
நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி, |
|
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என் |
|
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி |
|
10 |
வல்லகொல், செல்லத் தாமே கல்லென |
ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின், |
|
நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த, |
|
கொடுங் கோல் உமணர், பகடு தெழி தெள் விளி |
|
நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும், |
|
15 |
கடுங் கதிர் திருகிய, வேய் பயில், பிறங்கல், |
பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து |
|
அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின், |
|
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர், |
|
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர், |
|
20 |
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி, |
வைகுறு மீனின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து, |
|
பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று, |
|
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி, |
|
மராஅ யானை மதம் தப ஒற்றி, |
|
5 |
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் |
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து, |
|
நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து |
|
ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப! |
|
ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள், |
|
10 |
வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும் |
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் |
|
நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால், |
|
உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக் |
|
கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை, |
|
15 |
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில், |
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை |
|
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய் |
|
ஓம்பினள் எடுத்த, தட மென் தோளே. |
|
தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது. - கபிலர் | |
உரை |
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத் |
|
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல், |
|
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத் |
|
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள், |
|
5 |
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச் |
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய், |
|
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப் |
|
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே, |
|
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர் |
|
10 |
மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன் |
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி, |
|
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல், |
|
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும், |
|
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில், |
|
15 |
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை |
இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட, |
|
மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட் |
|
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க, |
|
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச் |
|
20 |
செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின் |
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த |
|
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர் |
|
ஊறாது இட்ட உவலைக் கூவல், |
|
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர் |
|
25 |
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து, |
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும் |
|
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே. |
|
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. - காவன்முல்லைப் பூதனார் | |
உரை |
அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும் |
|
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன் |
|
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல் |
|
இது என அறியா மறுவரற் பொழுதில், |
|
5 |
'படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை |
நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என, |
|
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற, |
|
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி, |
|
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து, |
|
10 |
உருவச் செந்தினை குருதியொடு தூஉய், |
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள், |
|
ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த |
|
சாரற் பல் பூ வண்டு படச் சூடி, |
|
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் |
|
15 |
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல, |
நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை |
|
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப, |
|
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து, |
|
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த |
|
20 |
நோய் தணி காதலர் வர, ஈண்டு |
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே? |
|
வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்து, தலைமகள் ஆற்றாளாக,தோழி தலைமகனை இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட மொழிந்தது;தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாக, தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக் கண்ணியார். | |
உரை |
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த |
|
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன, |
|
தளை பிணி அவிழா, சுரி முகப் பகன்றை, |
|
சிதரல் அம் துவலை தூவலின், மலரும் |
|
5 |
தைஇ நின்ற தண் பெயல் கடைநாள், |
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை, |
|
விசும்பு உரிவதுபோல், வியல் இடத்து ஒழுகி, |
|
மங்குல் மா மழை, தென் புலம் படரும் |
|
பனி இருங் கங்குலும் தமியள் நீந்தி, |
|
10 |
தம் ஊரோளே, நன்னுதல்; யாமே, |
கடி மதில் கதவம் பாய்தலின், தொடி பிளந்து, |
|
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு, |
|
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி, |
|
கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு, |
|
15 |
தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து, |
கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த் தோள், |
|
இரவுத் துயில் மடிந்த தானை, |
|
உரவுச் சின வேந்தன் பாசறையேமே. |
|
தலைமகன் பருவங் கண்டு சொல்லியது. வினைமுற்றும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - ஆவூர் மூலங் கிழார் | |
உரை |
கூன் முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற, |
|
மீன் முள் அன்ன, வெண் கால் மா மலர் |
|
பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும் |
|
அவ் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப் |
|
5 |
புலத்தல் கூடுமோ தோழி! அல்கல் |
பெருங் கதவு பொருத யானை மருப்பின் |
|
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி, |
|
மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி |
|
முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி, |
|
10 |
'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம் மற்று |
இவை பாராட்டிய பருவமும் உளவே; இனியே |
|
புதல்வற் தடுத்த பாலொடு தடைஇ, |
|
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை |
|
நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் |
|
15 |
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே; |
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக் |
|
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச் |
|
செவிலி கை என் புதல்வனை நோக்கி, |
|
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர்; இஃதோ |
|
20 |
செல்வற்கு ஒத்தனம், யாம்' என, மெல்ல என் |
மகன்வயின் பெயர்தந்தேனே; அது கண்டு, |
|
'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய், |
|
சிறு புறம் கவையினனாக, உறு பெயல் |
|
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ் செய் |
|
25 |
மண் போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே |
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே? |
|
தலைமகன் தோழியை வாயில் வேண்டி, அவளால் தான் வாயில் பெறாது,ஆற்றாமையே வாயிலாகப் புக்கு, கூடிய தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி | |
உரை |
"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை |
|
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் |
|
கானம் கடிய என்னார், நாம் அழ, |
|
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார், |
|
5 |
செல்ப" என்ப' என்போய்! நல்ல |
மடவைமன்ற நீயே; வடவயின் |
|
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை, |
|
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் |
|
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன |
|
10 |
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் |
தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப |
|
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத் |
|
தெள் நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப் |
|
பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட, |
|
15 |
வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல் |
குருதியொடு துயல்வந்தன்ன நின் |
|
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே? |
|
செலவு உணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைக்கணக்காயனார் | |
உரை |
"தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள், |
|
கிடந்து உயிர் மறுகுவதுஆயினும், இடம் படின் |
|
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த |
|
தாழ்வு இல் உள்ளம் தலைதலைச் சிறப்ப, |
|
5 |
செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று |
இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின் |
|
மாவின் நறு வடி போல, காண்தொறும் |
|
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் |
|
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம், |
|
10 |
வாழலென் யான்" எனத் தேற்றி, பல் மாண் |
தாழக் கூறிய தகைசால் நல் மொழி |
|
மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்த நின் |
|
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க |
|
வினவல் ஆனாப் புனைஇழை! கேள் இனி |
|
15 |
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை, |
கொம்மை வாடிய இயவுள் யானை |
|
நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி, |
|
அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும் |
|
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை, |
|
20 |
எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு |
நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு |
|
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை, |
|
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே! |
|
வினை முற்றி மீண்ட தலைமகன், 'எம்மையும் நினைத்தறிதிரோ?' என்ற தலைமகட்குச் சொல்லியது. - வெள்ளாடியனார் | |
உரை |
நெருநல் எல்லை ஏனல் தோன்றி, |
|
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து, |
|
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள, |
|
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி, |
|
5 |
சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண் |
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா, |
|
'சூரரமகளிரின் நின்ற நீ மற்று |
|
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச் |
|
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு |
|
10 |
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என் |
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல் |
|
கடிய கூறி, கை பிணி விடாஅ, |
|
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற |
|
என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என்வயின் |
|
15 |
சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து, |
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் |
|
தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ. |
|
சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே |
|
மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று, |
|
20 |
என் குறைப் புறனிலை முயலும் |
அண்கணாளனை நகுகம், யாமே. |
|
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது; தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉம் ஆம்.- நல்வெள்ளியார் | |
உரை |
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக் |
|
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி, |
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் |
|
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து, |
|
5 |
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, |
|
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு, |
|
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர! |
|
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை, |
|
10 |
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில், |
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு |
|
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே, |
|
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் |
|
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப, |
|
15 |
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன், |
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி, |
|
நார் அரி நறவின் எருமையூரன், |
|
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் |
|
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று |
|
20 |
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல் |
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல, |
|
கொன்று, களம்வேட்ட ஞான்றை, |
|
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே! |
|
தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர் | |
உரை |
கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை |
|
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி, |
|
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி |
|
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய, |
|
5 |
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி, |
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது |
|
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய், |
|
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே |
|
கொய் அகை முல்லை காலொடு மயங்கி, |
|
10 |
மை இருங் கானம் நாறும் நறு நுதல், |
பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை |
|
நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும் |
|
அளியரோ அளியர்தாமே அளி இன்று |
|
ஏதில் பொருட்பிணிப் போகி, தம் |
|
15 |
இன் துணைப் பிரியும் மடமையோரே! |
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரையாசிரியர் நல்லந்துவனார் | |
உரை |
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் |
|
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப, |
|
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து, |
|
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு, |
|
5 |
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் |
காடு இறந்தனரே, காதலர். மாமை, |
|
அரி நுண் பசலை பாஅய், பீரத்து |
|
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே, |
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
10 |
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி, |
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் |
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே, |
|
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து, |
|
ஆதிமந்தி போல, பேதுற்று |
|
15 |
அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார், |
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல், |
|
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய |
|
உடை மதில் ஓர் அரண் போல, |
|
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே! |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார் | |
உரை |
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான் |
|
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து, |
|
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி, |
|
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய |
|
5 |
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை |
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர! |
|
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று, |
|
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல், |
|
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து, |
|
10 |
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம் |
கூறேம். வாழியர், எந்தை! செறுநர் |
|
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும் |
|
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் |
|
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் |
|
15 |
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க; |
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ? |
|
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- அள்ளூர் நன் முல்லையார் | |
உரை |
காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின், |
|
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை, |
|
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின், |
|
விளி முறை அறியா வேய் கரி கானம், |
|
5 |
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள் |
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து யாம் |
|
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ, |
|
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு |
|
கண்படை பெறேன், கனவ ஒண் படைக் |
|
10 |
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் |
பொருது புண் நாணிய சேரலாதன் |
|
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென, |
|
இன்னா இன் உரை கேட்ட சான்றோர் |
|
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர், |
|
15 |
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண் |
காதல் வேண்டி, எற் துறந்து |
|
போதல்செல்லா என் உயிரொடு புலந்தே. |
|
புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார் | |
உரை |
சிறு பைந் தூவிச் செங் காற் பேடை |
|
நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி, |
|
வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது, |
|
பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து, |
|
5 |
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக் |
குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ் |
|
இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர, |
|
பெருங் கை யானை நிவப்பின் தூங்கும் |
|
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை, |
|
10 |
யாமே எமியம்ஆக, தாமே |
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின் |
|
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர் |
|
வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ |
|
கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன் |
|
15 |
முதுநீர் முன்துறை முசிறி முற்றி, |
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் |
|
அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து, |
|
பானாட் கங்குலும் பகலும் |
|
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே? |
|
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.- நக்கீரர் | |
உரை |
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப் |
|
பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும் |
|
வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது |
|
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை, |
|
5 |
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் |
மரம் செல மிதித்த மாஅல் போல, |
|
புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை, |
|
நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள் |
|
படி ஞிமிறு கடியும் களிறே தோழி! |
|
10 |
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல், |
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து, |
|
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை, |
|
இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த |
|
தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம் |
|
15 |
தாம் பாராட்டிய காலையும் உள்ளார் |
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு |
|
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப் |
|
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகன் | |
உரை |
'நோற்றோர்மன்ற தாமே கூற்றம் |
|
கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்' எனத் |
|
தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர் |
|
நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து |
|
5 |
ஆழல் வாழி, தோழி! தாழாது, |
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால் |
|
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ, |
|
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன் |
|
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு, |
|
10 |
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் |
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான் |
|
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி |
|
விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும், |
|
பழகுவர்ஆதலோ அரிதே முனாஅது |
|
15 |
முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி |
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின் |
|
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த |
|
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே. |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன |
|
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய், |
|
ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள், |
|
மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன |
|
5 |
மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு |
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி |
|
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப, |
|
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின், |
|
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று |
|
10 |
நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல, |
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல் |
|
ஆகம் அடைதந்தோளே வென் வேற் |
|
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி |
|
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக் |
|
15 |
கடவுள் எழுதிய பாவையின், |
மடவது மாண்ட மாஅயோளே. |
|
அல்லகுறிப்பட்டுழி, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி, |
|
திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு |
|
பெரு மலை இறந்தது நோவேன்; நோவல் |
|
கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி, |
|
5 |
முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி |
பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப, |
|
கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல் |
|
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண், |
|
அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி, |
|
10 |
கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து, |
மன்று நிறை பைதல் கூர, பல உடன் |
|
கறவை தந்த கடுங் கால் மறவர் |
|
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ |
|
முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை |
|
15 |
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை |
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள், |
|
'வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண் |
|
சேக் கோள் அறையும் தண்ணுமை |
|
கேட்குநள்கொல்?' எனக் கலுழும் என் நெஞ்சே. |
|
தலைமகள் புணர்ந்துடன் செல்ல, செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.- கருவூர்க் கண்ணம்புல்லனார் | |
உரை |
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் |
|
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம் |
|
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் |
|
சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்; |
|
5 |
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற் |
பாடிச் சென்ற பரிசிலர் போல |
|
உவ இனி வாழி, தோழி! அவரே, |
|
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச் |
|
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும் |
|
10 |
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி, |
மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர் |
|
வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு, |
|
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை |
|
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன |
|
15 |
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி, |
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் |
|
ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள், |
|
நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை, |
|
நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு |
|
20 |
அரியவால்' என அழுங்கிய செலவே! |
வேறுப்பட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத் |
|
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய, |
|
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம் |
|
கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை |
|
5 |
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை |
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என, |
|
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே; |
|
பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள், |
|
அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை |
|
10 |
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் |
வருவர்ஆயின், 'பருவம் இது' எனச் |
|
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின் |
|
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக, |
|
வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து |
|
15 |
இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத் |
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப, |
|
கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம் |
|
புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன் |
|
வெண் கோட்டு யானை விளி படத் துழவும் |
|
20 |
அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப் |
பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே. |
|
தலைமகன் இரவுக்குறி வந்தமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - ஊட்டியார் | |
உரை |
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம் |
|
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள், |
|
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம் |
|
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி, |
|
5 |
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை |
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண், |
|
ஆறே அரு மரபினவே; யாறே |
|
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய; |
|
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க, |
|
10 |
'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து, |
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன், |
|
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய, |
|
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை |
|
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த |
|
15 |
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் |
வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை, |
|
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி, |
|
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக |
|
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த |
|
20 |
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின் |
ஆனா அரும் படர் செய்த | |
யானே, தோழி! தவறு உடையேனே. |
|
தலைமகன் இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.- எருமை வெளியனார் மகனார் கடலனார் | |
உரை |
பின்னொடு முடித்த மண்ணா முச்சி |
|
நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ; |
|
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு |
|
ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க, |
|
5 |
வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய், |
நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர |
|
'என் ஆகுவள்கொல், அளியள்தான்?' என, |
|
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் |
|
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி |
|
10 |
இருவேம் நம் படர் தீர வருவது |
காணிய வம்மோ காதல்அம் தோழி! |
|
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் |
|
மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின், |
|
ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப் |
|
15 |
பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி |
விடு பொறிச் சுடரின் மின்னி, அவர் |
|
சென்ற தேஎத்து நின்றதால், மழையே. |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான் குறித்த பருவ வரவு கண்டு அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. - எருமை வெளியனார் | |
உரை |
'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி, |
|
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின், |
|
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து, |
|
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல் |
|
5 |
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ, |
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல், |
|
தேம் பிழி நறவின் குறவர் முன்றில், |
|
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள் |
|
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென |
|
10 |
வாடை தூக்கும் வருபனி அற்சிரம், |
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர் |
|
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என, |
|
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும், |
|
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட! |
|
15 |
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை |
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று |
|
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு, |
|
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி, |
|
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது, |
|
20 |
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி, |
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய, |
|
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி |
|
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த |
|
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே? |
|
களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை நக்கீரனார் | |
உரை |
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் |
|
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின், |
|
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை |
|
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு, |
|
5 |
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும் |
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக் |
|
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை |
|
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள |
|
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை |
|
10 |
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த |
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர் |
|
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும் |
|
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம் |
|
மை எழில் உண்கண் கலுழ |
|
15 |
ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே? |
பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார் | |
உரை |
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் |
|
கோடை அவ் வளி குழலிசை ஆக, |
|
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை |
|
தோடு அமை முழவின் துதை குரல் ஆக, |
|
5 |
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு, |
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக, |
|
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து, |
|
மந்தி நல் அவை மருள்வன நோக்க, |
|
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில் |
|
10 |
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன் |
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து, |
|
செருச் செய் யானை செல் நெறி வினாஅய், |
|
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை, |
|
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர் |
|
15 |
பலர்தில், வாழி தோழி! அவருள், |
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி, |
|
ஓர் யான் ஆகுவது எவன்கொல், |
|
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே? |
|
தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது. - கபிலர் | |
உரை |
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச் |
|
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, |
|
கறை அடி மடப் பிடி கானத்து அலற, |
|
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து, |
|
5 |
கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து, |
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி, |
|
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர், |
|
நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும் |
|
கல்லா இளையர் பெருமகன் புல்லி |
|
10 |
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும், |
சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ, |
|
எய்த வந்தனவால்தாமே நெய்தல் |
|
கூம்பு விடு நிகர் மலர் அன்ன |
|
ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே. |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும், |
|
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், |
|
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர் |
|
அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து, |
|
5 |
ஆழல் வாழி, தோழி! 'சாரல், |
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி, |
|
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை |
|
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும் |
|
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை, |
|
10 |
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை |
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை |
|
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து, |
|
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார், |
|
வருதும், யாம்' எனத் தேற்றிய |
|
15 |
பருவம்காண் அது; பாயின்றால் மழையே. |
தலைமகன் பிரிய, வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் | |
உரை |
முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை |
|
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப் |
|
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும் |
|
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி, |
|
5 |
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய |
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம் |
|
நடுங்கு துயர் களைந்த நன்னராளன் |
|
சென்றனன்கொல்லோ தானே குன்றத்து |
|
இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக் |
|
10 |
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் |
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து, |
|
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் |
|
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி, |
|
கொடு விரல் உளியம் கெண்டும் |
|
15 |
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே? |
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- ஈழத்துப் பூதன் தேவனார் | |
உரை |
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு |
|
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின், |
|
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் |
|
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது, |
|
5 |
பாசி தின்ற பைங் கண் யானை |
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க, |
|
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை |
|
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும், |
|
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ் |
|
10 |
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக் |
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த |
|
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர், |
|
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப, |
|
பசி என அறியாப் பணை பயில் இருக்கை, |
|
15 |
தட மருப்பு எருமை தாமரை முனையின், |
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும், |
|
குடநாடு பெறினும் தவிரலர் |
|
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே. |
|
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் | |
உரை |
கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும், |
|
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும், |
|
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து; |
|
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர் |
|
5 |
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன |
பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும் |
|
செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்; |
|
அரண் பல கடந்த, முரண் கொள் தானை, |
|
வாடா வேம்பின், வழுதி கூடல் |
|
10 |
நாள் அங்காடி நாறும் நறு நுதல் |
நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு, |
|
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர், |
|
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை |
|
நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து, |
|
15 |
நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப, |
முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல் |
|
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து, |
|
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி, |
|
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை, |
|
20 |
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை |
திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை. |
|
தெண் நீர் உயர் கரைக் குவைஇய |
|
தண் ஆன்பொருநை மணலினும் பலவே. |
|
வினை முற்றி மீளலுறும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கணக்காயனார் மகனார் நக்கீரனார் | |
உரை |
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து, |
|
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும் |
|
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின் |
|
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி |
|
5 |
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி, |
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை |
|
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும் |
|
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர! |
|
'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து |
|
10 |
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே |
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின், |
|
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை, |
|
அண்ணல் யானை அடு போர்ச் சோழர், |
|
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை, |
|
15 |
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய, |
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை, |
|
களிறு கவர் கம்பலை போல, |
|
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே. |
|
தோழி வாயில் மறுத்தது. மருதம் பாடிய இளங்கடுங்கோ | |
உரை |
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன |
|
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் |
|
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில் |
|
மாண் இழை மகளிர் பூணுடை முலையின் |
|
5 |
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை |
அதிரல் பரந்த அம் தண் பாதிரி |
|
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ |
|
மராஅ மலரொடு விராஅய், பராஅம் |
|
அணங்குடை நகரின் மணந்த பூவின் |
|
10 |
நன்றே, கானம்; நயவரும் அம்ம; |
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை |
|
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின், |
|
பிடி மிடை, களிற்றின் தோன்றும் |
|
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே! |
|
உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
அரையுற்று அமைந்த ஆரம் நீவி, |
|
புரையப் பூண்ட கோதை மார்பினை, |
|
நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து, |
|
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே. |
|
5 |
பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த |
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த |
|
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் |
|
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை, |
|
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த |
|
10 |
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் |
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான், |
|
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப் |
|
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை |
|
வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன |
|
15 |
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் |
வைகுறு விடியல் போகிய எருமை |
|
நெய்தல் அம் புது மலர் மாந்தும் |
|
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே! |
|
தோழி வரைவு கடாயது. - உலோச்சனார் | |
உரை |
உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக் |
|
கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென; |
|
உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு |
|
ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா, |
|
5 |
ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி |
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட; |
|
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது, |
|
படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென |
|
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்; |
|
10 |
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப, |
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன், |
|
காவலர் அறிதல் ஓம்பி, பையென |
|
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து, |
|
உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து, |
|
15 |
இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி! |
இன்று எவன்கொல்லோ கண்டிகும் மற்று அவன் |
|
நல்காமையின் அம்பல் ஆகி, |
|
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் |
|
இருஞ் சூழ் ஓதி ஒண் நுதற் பசப்பே? |
|
இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன் | |
உரை |
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு |
|
ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம் |
|
வரைமுதல் சிதறிய வை போல், யானைப் |
|
புகர் முகம் பொருத புது நீர் ஆலி |
|
5 |
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப, |
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின் |
|
விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி, |
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும் |
|
10 |
இருளிடைத் தமியன் வருதல் யாவதும் |
அருளான் வாழி, தோழி! அல்கல் |
|
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின் |
|
அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல், |
|
காயா மென் சினை தோய நீடிப் |
|
15 |
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள் |
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி |
|
கை ஆடு வட்டின் தோன்றும் |
|
மை ஆடு சென்னிய மலைகிழவோனே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார் | |
உரை |
பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ் |
|
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி, |
|
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே |
|
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக் |
|
5 |
காடு கால்யாத்த நீடு மரச் சோலை |
விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை, |
|
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் |
|
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச் |
|
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டென, |
|
10 |
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர், |
கைப்பொருள் இல்லைஆயினும், மெய்க் கொண்டு |
|
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப் |
|
பெருங் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் |
|
அறன் இல் வேந்தன் ஆளும் |
|
15 |
வறன் உறு குன்றம் பல விலங்கினவே. |
இடைச் சுரத்துத் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- கடுந்தொடைக் காவினார் | |
உரை |
உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர் |
|
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி |
|
வருவர் வாழி, தோழி! அரச |
|
யானை கொண்ட துகிற் கொடி போல, |
|
5 |
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி |
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர, |
|
மழை என மருண்ட மம்மர் பல உடன் |
|
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை |
|
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும் |
|
10 |
அத்தக் கேழல் அட்ட நற் கோள் |
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப, |
|
குருதி ஆரும் எருவைச் செஞ் செவி, |
|
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட |
|
புண் தேர் விளக்கின், தோன்றும் |
|
15 |
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி |
|
சிதலை செய்த செந் நிலைப் புற்றின் |
|
மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி, |
|
இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல் |
|
5 |
ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி |
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும் |
|
பனி இருஞ் சோலை, 'எமியம்' என்னாய், |
|
தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே; |
|
நாள் இடைப்படின், என் தோழி வாழாள்; |
|
10 |
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை; |
கழியக் காதலர்ஆயினும், சான்றோர் |
|
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்; |
|
வரையின் எவனோ? வான் தோய் வெற்ப! |
|
கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் |
|
15 |
மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார், |
தொன்று இயல் மரபின் மன்றல் அயர, |
|
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி, |
|
நொதுமல் விருந்தினம் போல, இவள் |
|
புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே. |
|
இரவுக்குறி வந்த தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவு கடாயது. - நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர் கிழார் | |
உரை |
நன்று அல் காலையும் நட்பின் கோடார், |
|
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின், |
|
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன் |
|
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி, |
|
5 |
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர் |
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின் |
|
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து, |
|
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற, |
|
நல்காது துறந்த காதலர், 'என்றும் |
|
10 |
கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி |
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர் |
|
இகந்தனர்ஆயினும், இடம் பார்த்துப் பகைவர் |
|
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் |
|
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் |
|
15 |
கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல் |
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி |
|
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர், |
|
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர் |
|
எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர் |
|
20 |
அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி, |
சேயர்' என்றலின், சிறுமை உற்ற என் |
|
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க, |
|
அழாஅம் உறைதலும் உரியம் பராரை |
|
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப் |
|
25 |
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு, |
மெய் இவண் ஒழியப் போகி, அவர் |
|
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே! |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப் |
|
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும் |
|
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல் |
|
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக; |
|
5 |
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என் |
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும் |
|
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள் |
|
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் |
|
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய |
|
10 |
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச் |
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று |
|
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை, |
|
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை, |
|
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி |
|
15 |
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை, |
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு, |
|
நம் நீத்து உறையும் பொருட்பிணிக் |
|
கூடாமையின், நீடியோரே. |
|
பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன், |
|
தேம் கமழ் இணர வேங்கை சூடி, |
|
தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ, |
|
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து, |
|
5 |
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட, |
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள, |
|
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப் |
|
பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய |
|
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள் |
|
10 |
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும். |
என் ஆகுவள்கொல்தானே? பல் நாள் |
|
புணர் குறி செய்த புலர்குரல் ஏனல் |
|
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்; |
|
அளியள்தான், நின் அளி அலது இலளே! |
|
செறிப்பு அறிவுறீஇ, 'இரவும் பகலும் வாரல்' என்று வரைவு கடாஅயது.- கபிலர் | |
உரை |
'நுதலும் தோளும், திதலை அல்குலும், |
|
வண்ணமும், வனப்பும், வரியும், வாட |
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி, |
'வரைவு நன்று' என்னாது அகலினும், அவர் வறிது, |
|
5 |
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை, |
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப, |
|
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள, |
|
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் |
|
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் |
|
10 |
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து, |
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை, |
|
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை, |
|
மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு |
|
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப, |
|
15 |
துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள |
மறப் புலி உழந்த வசி படு சென்னி |
|
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி, |
|
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை |
|
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை, |
|
20 |
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே? |
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது; தோழி தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம். - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல் |
|
வேனில் நீடிய வான் உயர் வழிநாள், |
|
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத் |
|
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல் |
|
5 |
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி, |
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு |
|
செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி, |
|
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து |
|
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு |
|
10 |
தான் வரும் என்ப, தட மென் தோளி |
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட |
|
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை |
|
கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து |
|
வெருள் ஏறு பயிரும் ஆங்கண், |
|
15 |
கரு முக முசுவின் கானத்தானே. |
தோழியால் தலைமகளை உடன்வரும் எனக் கேட்ட தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகன் | |
உரை |
'நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி, |
|
வந்து திறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து |
|
சென்றீக' என்பஆயின், வேந்தனும் |
|
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு |
|
5 |
இன்றே புகுதல் வாய்வது; நன்றே. |
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத் |
|
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுற, |
|
பாசறை வருத்தம் வீட, நீயும் |
|
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயற் புனை படை, |
|
10 |
கொய்சுவல், புரவி, கை கவர் வயங்கு பரி, |
வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை |
|
வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய, |
|
காலை எய்த, கடவுமதி மாலை |
|
அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை |
|
15 |
அரமிய வியலகத்து இயம்பும் |
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே. |
|
தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ, |
|
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி |
|
இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை |
|
ஆலி அன்ன வால் வீ தாஅய், |
|
5 |
வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத் |
தாது உறு குவளைப்போது பிணி அவிழ, |
|
படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க் |
|
கடாஅம் மாறிய யானை போல, |
|
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ |
|
10 |
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர, |
பனி அடூஉ நின்ற பானாட் கங்குல் |
|
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென, |
|
முனிய அலைத்தி, முரண் இல் காலை; |
|
கைதொழு மரபின் கடவுள் சான்ற |
|
15 |
செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின் |
விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான் |
|
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த |
|
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார், |
|
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற |
|
20 |
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த |
பீடு இல் மன்னர் போல, |
|
ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே. |
|
தலைமகன் வினை முற்றி மீண்டமை உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. -பரணர் | |
உரை |
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே; |
|
கொன்றோரன்ன கொடுமையோடு இன்றே |
|
யாமம் கொள வரின் கனைஇ, காமம் |
|
கடலினும் உரைஇ, கரை பொழியும்மே. |
|
5 |
எவன்கொல் வாழி, தோழி! மயங்கி |
இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம் |
|
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு, |
|
இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில் |
|
குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடி, |
|
10 |
கான நாடன் வரூஉம், யானைக் |
கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறு நெறி, |
|
மாரி வானம் தலைஇ நீர் வார்பு, |
|
இட்டு அருங் கண்ண படுகுழி இயவின், |
|
இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர் |
|
15 |
தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே? |
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து, |
|
ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி |
|
ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின், |
|
களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி, |
|
5 |
வால் நிணப் புகவின், கானவர் தங்கை |
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண் |
|
ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின், |
|
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப! |
|
துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக் |
|
10 |
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை |
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள் |
|
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை |
|
இருங் கவுட் கடாஅம் கனவும், |
|
பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே. |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று,வரைவு கடாயது. - தாயங்கண்ணனார் | |
உரை |
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட |
|
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ, |
|
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் |
|
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே |
|
5 |
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் |
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண், |
|
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று |
|
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற் |
|
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள், |
|
10 |
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் |
தீ இல் அடுப்பின் அரங்கம் போல, |
|
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும், |
|
தோளா முத்தின் தெண் கடற் பொருநன் |
|
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன் |
|
15 |
நல் எழில் நெடு வேய் புரையும் |
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே. |
|
'தலைமகன் பிரியும்' எனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- உறையூர் |
|
முதுகூத்தனார் | |
உரை |
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி! |
|
குவளை உண்கண் தெண் பனி மல்க, |
|
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை |
|
பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின் |
|
5 |
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி, |
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை, |
|
திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில், |
|
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் |
|
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது, |
|
10 |
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ, |
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு |
|
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும் |
|
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு |
|
நின்னொடு தெளித்த நல் மலை நாடன் |
|
15 |
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி, |
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள், |
|
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட் |
|
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி |
|
நல் நிறம் மருளும் அரு விடர் |
|
20 |
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே. |
தலைமகன் சிறைப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார் | |
உரை |
144. முல்லை |
''வருதும்'' என்ற நாளும் பொய்த்தன; |
|
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா; |
|
தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை |
|
வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை |
|
5 |
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், |
அருள் கண்மாறலோ மாறுக அந்தில் |
|
அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர்' எனச் |
|
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும், |
|
பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு, |
|
10 |
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல |
உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின் |
|
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் |
|
கடாஅ யானை கொட்கும் பாசறை, |
|
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை |
|
15 |
கூர் வாட் குவிமுகம் சிதைய நூறி, |
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி |
|
வான மீனின் வயின் வயின் இமைப்ப, |
|
அமர் ஓர்த்து, அட்ட செல்வம் |
|
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே. |
|
வினை முற்றிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் உரைப்பானாய், பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் | |
உரை |
வேர் முழுது உலறி நின்ற புழற்கால், |
|
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும், |
|
வற்றல் மரத்த பொற் தலை ஓதி |
|
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள, |
|
5 |
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு |
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு |
|
வாள்வரி பொருத புண் கூர் யானை |
|
புகர் சிதை முகத்த குருதி வார, |
|
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும் |
|
10 |
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர் |
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய |
|
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல, |
|
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில் |
|
15 |
குஞ்சரக் குரல குருகோடு ஆலும், |
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை, |
|
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், |
|
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற் |
|
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது, |
|
20 |
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், |
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என் |
|
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே! |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை, |
|
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின், |
|
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை |
|
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி; |
|
5 |
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து; |
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட! |
|
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் |
|
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென, |
|
காணிய செல்லாக் கூகை நாணி, |
|
10 |
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை |
பெரிதால் அம்ம இவட்கே; அதனால் |
|
மாலை, வருதல் வேண்டும் சோலை |
|
முளை மேய் பெருங் களிறு வழங்கும் |
|
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே. |
|
பகல் வருவானை 'இரவு வருக' என்றது. - பரணர் | |
உரை |
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த |
|
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின், |
|
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப் |
|
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும் |
|
5 |
அத்த நீள் இடைப் போகி, நன்றும் |
அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும் |
|
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர் |
|
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க, |
|
யவனர் தந்த வினை மாண் நன் கலம் |
|
10 |
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் |
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ, |
|
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய |
|
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன் |
|
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது, |
|
15 |
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய, |
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, |
|
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து |
|
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் |
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே. |
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
உரை |
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து, |
|
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண் |
|
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் |
|
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை, |
|
5 |
சினம் கெழு தானை. தித்தன் வெளியன்.
|
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை, |
|
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும் |
|
சிறு வெள் இறவின் குப்பை அன்ன |
|
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் |
|
10 |
முனை முரண் உடையக் கடந்த வென் வேல், |
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ், |
|
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்; |
|
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில் |
|
களி மயிற் கலாவத்தன்ன. தோளே |
|
15 |
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி |
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த |
|
கடவுட் காந்தளுள்ளும், பல உடன் |
|
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி, |
|
வல்லினும், வல்லார்ஆயினும், சென்றோர்க்குச் |
|
20 |
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும், |
மாஅல் யானை ஆஅய் கானத்துத் |
|
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல் |
|
வேய் அமைக் கண் இடை புரைஇ, |
|
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர் | |
உரை |
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும் |
|
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும் |
|
பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம் |
|
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே |
|
5 |
நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம் |
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின் |
|
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் |
|
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய |
|
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி, |
|
10 |
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது |
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி |
|
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி, |
|
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை |
|
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த |
|
15 |
விரல் ஊன்று வடுவின் தோன்றும் |
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
அரியற் பெண்டிர் அல்கிற் கொண்ட |
|
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த |
|
அரி நிறக் கலுழி ஆர மாந்தி, |
|
செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர், |
|
5 |
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின் |
எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல் |
|
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி, |
|
கான யானை கவளம் கொள்ளும் |
|
அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார் |
|
10 |
நெஞ்சு உண மொழிபமன்னே தோழி! |
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து, |
|
பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய், |
|
வினை அழி பாவையின் உலறி, |
|
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே! |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வேம்பற்றூர்க் குமரனார் | |
உரை |
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின் |
|
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை |
|
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி |
|
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின், |
|
5 |
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர் |
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி, |
|
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென |
|
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர், |
|
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி, |
|
10 |
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும் |
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி |
|
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி! |
|
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை |
|
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது |
|
15 |
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன் |
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத் |
|
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி, |
|
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில் |
|
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும், |
|
20 |
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின் |
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க் கவுதமன் சாதேவனார் | |
உரை |
கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து |
|
அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல, |
|
கடல் கண்டன்ன மாக விசும்பின் |
|
அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க, |
|
5 |
கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி, |
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடு நாள், |
|
அருங் கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி, |
|
பனி மயங்கு அசைவளி அலைப்ப, தந்தை |
|
நெடு நகர் ஒரு சிறை நின்றனென்ஆக; |
|
10 |
அறல் என அவிர்வரும் கூந்தல், மலர் என |
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண், |
|
முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், |
|
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய், |
|
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி, |
|
15 |
கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது, |
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி |
|
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய |
|
நசை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன் |
|
கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின் |
|
20 |
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, |
வில் கெழு தானைப் பசும் பூண் பாண்டியன் |
|
களிறு அணி வெல் கொடி கடுப்ப, காண்வர |
|
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி, |
|
நேர் கொள் நெடு வரைக் கவாஅன் |
|
25 |
சூரரமகளிரின் பெறற்கு அரியோளே. |
இரவுக் குறிக்கண் தலைமகளைத் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய, |
|
தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடை நாள், |
|
எமியம் ஆக, துனி உளம் கூர, |
|
சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ, |
|
5 |
பெரு நசை உள்ளமொடு வருநசை நோக்கி |
விளியும் எவ்வமொடு, 'அளியள்' என்னாது |
|
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை |
|
முளரி கரியும் முன்பனிப் பானாள், |
|
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை! |
|
10 |
எனக்கே வந்தனை போறி! புனற் கால் |
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ, |
|
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது |
|
இனையை ஆகிச் செல்மதி; |
|
வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே! |
|
பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
கதிர் கையாக வாங்கி, ஞாயிறு |
|
பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி, |
|
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம் |
|
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்; |
|
5 |
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன் |
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற. |
|
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம். |
|
'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி, |
|
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு |
|
10 |
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம் |
இது நற் காலம்; கண்டிசின் பகைவர் |
|
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின், |
|
கந்து கால் ஒசிக்கும் யானை, |
|
வெஞ் சின வேந்தன் வினை விடப்பெறினே! |
|
பாசறைக்கண் இருந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார் | |
உரை |
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென, |
|
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ, |
|
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி |
|
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண், |
|
5 |
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் |
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு |
|
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும் |
|
'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!' என, |
|
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென, |
|
10 |
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ, |
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி, |
|
'தருமணற் கிடந்த பாவை என் |
|
அருமகளே என முயங்கினள் அழுமே! |
|
மகட் போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது. - ...... | |
உரை |
'நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி |
|
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின், |
|
மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும் |
|
பழம் பல் நெல்லின் வேளூர்வாயில், |
|
5 |
நறு விரை தெளித்த நாறுஇணர் மாலை, |
பொறி வரி இன வண்டு ஊதல கழியும் |
|
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம், |
|
அனையேன்ஆயின், அணங்குக, என்!' என |
|
10 |
மனையோட் தேற்றும் மகிழ்நன்ஆயின், |
யார்கொல் வாழி, தோழி! நெருநல் |
|
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ, |
|
வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு, |
|
புதுவது வந்த காவிரிக் |
|
15 |
கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே? |
பரத்தையொடு புனலாடிய தலைமகன் தலைமகளிடைப் புக்கு, 'யான் ஆடிற்றிலன்' என்று சூளுற்றான் என்பது கேட்ட பரத்தை, தன் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - இடையன் நெடுங்கீரனார் | |
உரை |
வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின் |
|
பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு |
|
வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை, |
|
விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே |
|
5 |
இனிது உடன் கழிந்தன்றுமன்னே; நாளைப் |
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச் |
|
சேக்குவம்கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து |
|
அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக் |
|
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ, |
|
10 |
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ், |
முருங்கை மேய்ந்த பெருங் கை யானை |
|
வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி |
|
இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென, |
|
மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து |
|
15 |
எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று |
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப் |
|
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில், |
|
குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க் |
|
கூர் முகச் சிதலை வேய்ந்த |
|
20 |
போர் மடி நல் இறைப் பொதியிலானே? |
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது. -கடியலூர் உருத்திரங்கண்ணனார் | |
உரை |
யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக, |
|
பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே; |
|
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப! |
|
பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த |
|
5 |
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் |
கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின் |
|
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து, |
|
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்; |
|
ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன் |
|
10 |
தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப, |
ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண் |
|
வாள் வரி வயப் புலி கல் முழை உரற, |
|
கானவர் மடிந்த கங்குல்; |
|
மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே? |
|
இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி, வரைவு கடாயது. -கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் | |
உரை |
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட, |
|
அலங்குகதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலை, |
|
புலி தொலைத்து உண்ட பெருங் களிற்று ஒழி ஊன் |
|
கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை, |
|
5 |
ஞெலி கோற் சிறு தீ மாட்டி, ஒலி திரைக் |
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர் |
|
சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக் கூட்டும் |
|
சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து; நனி |
|
பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து, |
|
10 |
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை |
மெல் விரல் சேர்த்திய நுதலள், மல்கிக் |
|
கயல் உமிழ் நீரின் கண் பனி வார, |
|
பெருந் தோள் நெகிழ்ந்த செல்லலொடு |
|
வருந்துமால், அளியள், திருந்திழைதானே! |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - தொண்டியாமூர்ச் சாத்தனார் | |
உரை |
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் |
|
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி |
|
இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக் |
|
கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும் |
|
5 |
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்; |
இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன் |
|
விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து, |
|
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி, |
|
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன் |
|
10 |
புல் வேய் குரம்பை புலர ஊன்றி, |
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில், |
|
பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து, |
|
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் |
|
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல் |
|
15 |
அறியேன் யான்; அஃது அறிந்தனென்ஆயின் |
அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள் |
|
மணி ஏர் மாண் நலம் சிதைய, |
|
பொன் நேர் பசலை பாவின்றுமன்னே! |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை வரைவு கடாயது. -மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் | |
உரை |
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின் |
|
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் |
|
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால், |
|
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில், |
|
5 |
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை |
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க, |
|
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து, |
|
வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு |
|
இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது |
|
10 |
ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல், |
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன் |
|
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர! |
|
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி |
|
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ, |
|
15 |
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து, |
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக் |
|
குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது |
|
உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல் |
|
புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து, |
|
20 |
நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய, |
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து |
|
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி, |
|
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ் |
|
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு, |
|
25 |
கூர்நுனை மழுகிய எயிற்றள் |
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே. |
|
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. மருதம் - பாடிய இளங்கடுங்கோ | |
உரை |
'தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும், |
|
இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?' எனப் |
|
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண் |
|
இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து |
|
5 |
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் |
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார், காண்பின் |
|
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக் |
|
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை, |
|
பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ, |
|
10 |
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை |
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும் |
|
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும், |
|
வல்லே வருவர்போலும் வெண் வேல் |
|
இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர் |
|
15 |
மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த |
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின் |
|
நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின் |
|
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த |
|
அணங்குடை வன முலைத் தாஅய நின் |
|
20 |
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார் | |
உரை |
வயிரத்தன்ன வை ஏந்து மருப்பின், |
|
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி |
|
பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி, |
|
நீலத்தன்ன அகல் இலைச் சேம்பின் |
|
5 |
பிண்டம் அன்ன கொழுங் கிழங்கு மாந்தி, |
பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு, |
|
யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப் |
|
பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன, |
|
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து |
|
10 |
அலங்கு குலை அலரி தீண்டி, தாது உக, |
பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர, |
|
கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து, |
|
கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு |
|
உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின் தோட் |
|
15 |
பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து, என்றும், |
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி |
|
'எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக் |
|
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறைத் |
|
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது' என, |
|
20 |
கனவினும் பிரிவு அறியலனே; அதன்தலை |
முன் தான் கண்ட ஞான்றினு ம் |
|
பின் பெரிது அளிக்கும், தன் பண்பினானே. |
|
தோழி வரைவு மலிந்து சொல்லியது. - பரணர் | |
உரை |
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
வெண்தேர் ஓடும் கடம் காய் மருங்கில், |
|
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு, |
|
சிறு கண் யானை நெடுங் கை நீட்டி |
|
5 |
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது, |
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின் |
|
விடு வாய்ச் செங் கணைக் கொடு வில் ஆடவர் |
|
நல் நிலை பொறித்த கல் நிலை அதர, |
|
அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச் |
|
10 |
சுரம் செல விரும்பினிர்ஆயின் இன் நகை, |
முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய், |
|
குவளை நாள் மலர் புரையும் உண்கண், இம் |
|
மதி ஏர் வாள் நுதல் புலம்ப, |
|
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே? |
|
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -கோடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார் | |
உரை |
'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத் |
|
திதலை அல்குல் அவ் வரி வாடவும், |
|
அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார் |
|
சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும் |
|
5 |
நீடலர்' என்றி தோழி! பாடு ஆன்று |
பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி, |
|
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு, |
|
வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி, |
|
இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி, |
|
10 |
காலை வந்தன்றால் காரே மாலைக் |
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி |
|
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் |
|
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற, |
|
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு |
|
15 |
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே? |
தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -கருவூர்க் கலிங்கத்தார் | |
உரை |
வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை |
|
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் |
|
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை |
|
நீர்மிசை நிவந்த நெடுந் தாள் அகல் இலை |
|
5 |
இருங் கயம் துளங்க, கால் உறுதொறும் |
பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு |
|
எழுந்த கௌவையோ பெரிதே; நட்பே, |
|
கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப் |
|
புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே, |
|
10 |
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட, |
ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப, |
|
தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து, |
|
இன்னும் பிறள் வயினானே; மனையோள் |
|
எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல், |
|
15 |
மாரி அம்பின், மழைத்தோற் பழையன் |
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என் |
|
செறிவளை உடைத்தலோ இலெனே; உரிதினின் |
|
யாம் தன் பகையேம்அல்லேம்; சேர்ந்தோர் |
|
திரு நுதல் பசப்ப நீங்கும் |
|
20 |
கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே. |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி நெருங்கியது. -பரணர் | |
உரை |
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு |
|
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி |
|
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு |
|
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி, |
|
5 |
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் |
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி, |
|
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர் |
|
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன, |
|
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் |
|
10 |
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு |
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண், |
|
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து, |
|
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி, |
|
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன |
|
15 |
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து |
வேனில் வெற்பின் கானம் காய, |
|
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை, |
|
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை |
|
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து, |
|
20 |
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை |
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி, |
|
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் |
|
வைகு கடல் அம்பியின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார் | |
உரை |
பசும் பழப் பலவின் கானம் வெம்பி, |
|
விசும்பு கண் அழிய, வேனில் நீடி, |
|
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் |
|
நாறு உயிர் மடப் பிடி தழைஇ, வேறு நாட்டு |
|
5 |
விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி, |
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன் |
|
வெவ் வரை அத்தம் சுட்டி, பையென, |
|
வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுற, |
|
திதலை அல்குல் குறுமகள் அவனொடு |
|
10 |
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும் |
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ, |
|
மனை மருண்டு இருந்த என்னினும், நனை மகிழ் |
|
நன்னராளர் கூடு கொள் இன் இயம் |
|
தேர் ஊர் தெருவில் ததும்பும் |
|
15 |
ஊர் இழந்தன்று, தன் வீழ்வு உறு பொருளே. |
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார் | |
உரை |
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும், |
|
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும், |
|
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த |
|
தொல் நலம் இழந்த துயரமொடு, என்னதூஉம் |
|
5 |
இனையல் வாழி, தோழி! முனை எழ |
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின், |
|
மறம் மிகு தானை, கண்ணன் எழினி |
|
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும், |
|
நீடலர் யாழ, நின் நிரை வளை நெகிழ |
|
10 |
தோள் தாழ்பு இருளிய குவை இருங் கூந்தல் |
மடவோள் தழீஇய விறலோன் மார்பில் |
|
புன் தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு, |
|
கடுஞ்சூல் மடப் பிடி தழீஇய வெண் கோட்டு |
|
இனம்சால் வேழம், கன்று ஊர்பு இழிதர, |
|
15 |
பள்ளி கொள்ளும் பனிச் சுரம் நீந்தி, |
ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம் |
|
வினை வலியுறூஉம் நெஞ்சமொடு |
|
இனையர் ஆகி, நப் பிரிந்திசினோரே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -மாமூலனார் | |
உரை |
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன், |
|
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும் |
|
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து, |
|
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர, |
|
5 |
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல் |
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ, |
|
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை, |
|
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன, |
|
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின், |
|
10 |
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய |
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே |
|
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் |
|
கடல் போல் கானம் பிற்பட, 'பிறர் போல் |
|
செல்வேம்ஆயின், எம் செலவு நன்று' என்னும் |
|
15 |
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப, |
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல் |
|
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட, |
|
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது, |
|
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், |
|
20 |
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய, |
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள், |
|
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல் |
|
இழந்த நாடு தந்தன்ன |
|
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
அம்ம, வாழி தோழி! 'பொன்னின் |
|
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை |
|
வினை நவில் யானை விறற் போர்ப் பாண்டியன் |
|
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை, |
|
5 |
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து, |
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல் |
|
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ, |
|
பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை, |
|
உரு கெழு பெருங் கடல் உவவுக் கிளர்ந்தாங்கு, |
|
10 |
அலரும் மன்று பட்டன்றே; அன்னையும் |
பொருந்தாக் கண்ணள், வெய்ய உயிர்க்கும்' என்று |
|
எவன் கையற்றனை, இகுளை? சோழர் |
|
வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும், |
|
ஆண்டு அமைந்து உறைநர்அல்லர் முனாஅது |
|
15 |
வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன், |
பெருங் கை எண்கின் பேழ்வாய் ஏற்றை |
|
இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளைத் |
|
தோல் முலைப் பிணவொடு திளைக்கும் |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன், |
|
கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப, |
|
புலிப் பகை வென்ற புண் கூர் யானை |
|
கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின், |
|
5 |
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் |
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி, |
|
சிறு பல் மின்மினி போல, பல உடன் |
|
மணி நிற இரும் புதல் தாவும் நாட! |
|
யாமே அன்றியும் உளர்கொல் பானாள், |
|
10 |
உத்தி அரவின் பைத் தலை துமிய, |
உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை, |
|
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக, |
|
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி |
|
தேராது வரூஉம் நின்வயின் |
|
15 |
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே? |
இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது. - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் | |
உரை |
'உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின் |
|
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல, |
|
தையல்! நின் வயின் பிரியலம் யாம்' எனப் |
|
பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி, |
|
5 |
துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே |
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர, |
|
நாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே |
|
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை |
|
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி, |
|
10 |
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி, |
பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க் |
|
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன |
|
செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற |
|
விழு நிதி எளிதினின் எய்துகதில்ல |
|
15 |
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி, |
நீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில், |
|
கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ |
|
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி, |
|
புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து, |
|
20 |
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர, |
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை |
|
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக் |
|
கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய |
|
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.- நக்கீரர் | |
உரை |
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின் |
|
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம் |
|
குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப் |
|
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர் |
|
5 |
நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக் |
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின், |
|
வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை, |
|
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள, |
|
வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல் |
|
10 |
பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல் |
தெண் கண் உவரிக் குறைக் குட முகவை, |
|
அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து, |
|
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள்கொல்லோ |
|
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக் |
|
15 |
கூழை உளர்ந்து மோழைமை கூறவும், |
மறுத்த சொல்லள் ஆகி, |
|
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே? |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் | |
உரை |
யாம இரவின் நெடுங் கடை நின்று, |
|
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும் |
|
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு |
|
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் |
|
5 |
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், |
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை, |
|
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு |
|
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து, |
|
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, 'புள் ஒருங்கு |
|
10 |
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று |
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி, |
|
நிழல் செய்து உழறல் காணேன், யான்' எனப் |
|
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து, |
|
உரு வினை நன்னன், அருளான், கரப்ப, |
|
15 |
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர் |
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல், |
|
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை |
|
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல் |
|
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல, |
|
20 |
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி, |
நல்கினள், வாழியர், வந்தே ஓரி |
|
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக் |
|
கார் மலர் கடுப்ப நாறும், |
|
ஏர் நுண், ஓதி மாஅயோளே! |
|
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
'தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும் |
|
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே, |
|
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான், |
|
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன், |
|
5 |
நேரா எழுவர் அடிப்படக் கடந்த |
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது' என, |
|
ஆழல் வாழி, தோழி! அவரே, |
|
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி |
|
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர் |
|
10 |
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து |
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல் |
|
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி |
|
செல்லா நல் இசை நிறுத்த வல் வில் |
|
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த |
|
15 |
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி, |
நிலை பெறு கடவுள் ஆக்கிய, |
|
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார் | |
உரை |
கேளாய், எல்ல! தோழி! வாலிய |
|
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம் |
|
பறை கண்டன்ன பா அடி நோன் தாள் |
|
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும், |
|
5 |
தண் மழை ஆலியின் தாஅய், உழவர் |
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும் |
|
பனி படு சோலை வேங்கடத்து உம்பர், |
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர் |
|
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை |
|
10 |
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய, |
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி, |
|
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட |
|
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய |
|
வன்கண் கதவின் வெண்மணி வாயில், |
|
15 |
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை, |
நீர் ஒலித்தன்ன பேஎர் |
|
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே. |
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது. -மாமூலனார் | |
உரை |
தா இல் நல் பொன் தைஇய பாவை |
|
விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன, |
|
மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால், |
|
கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற |
|
5 |
முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய், |
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் |
|
இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி, |
|
அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று |
|
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில், |
|
10 |
பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும், |
இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே |
|
என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு |
|
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று, |
|
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ, |
|
15 |
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை |
மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன் |
|
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து, |
|
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி, |
|
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய |
|
20 |
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக் |
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது |
|
எளியள் அல்லோட் கருதி, |
|
விளியா எவ்வம் தலைத் தந்தோயே. |
|
அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. -பரணர் | |
உரை |
வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர் |
|
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு |
|
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர், |
|
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி |
|
5 |
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி, |
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை |
|
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும் |
|
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து, |
|
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை |
|
10 |
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது, |
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப் |
|
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப் |
|
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து, |
|
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும் |
|
15 |
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை |
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள் |
|
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர் |
|
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும், |
|
சென்று, தாம் நீடலோஇலரே என்றும் |
|
20 |
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை, |
வலம் படு வென்றி வாய் வாள், சோழர் |
|
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த |
|
அறல் என நெறிந்த கூந்தல், |
|
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - தாயங்கண்ணனார் | |
உரை |
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய், |
|
பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம் |
|
இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி, |
|
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது; |
|
5 |
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை, |
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை, |
|
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே; |
|
அமரும் நம் வயினதுவே; நமர் என |
|
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி |
|
10 |
யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப் |
படு சுவற் கொண்ட பகு வாய்த் தெள் மணி |
|
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ, |
|
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப, |
|
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை |
|
15 |
மாரி மாலையும் தமியள் கேட்டே? |
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் | |
உரை |
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள் |
|
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல், |
|
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு, |
|
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும் |
|
5 |
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் |
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப் |
|
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்; |
|
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும், |
|
கழனி உழவர் குற்ற குவளையும், |
|
10 |
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு, |
பல் இளங் கோசர் கண்ணி அயரும், |
|
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் |
|
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல் |
|
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய |
|
15 |
பெருங் களிற்று எவ்வம் போல, |
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே. |
|
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத், தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார் | |
உரை |
'கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு |
|
முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த, |
|
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி, |
|
பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று, |
|
5 |
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து, |
புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள், |
|
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல், |
|
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை, |
|
படாஅவாகும், எம் கண்' என, நீயும், |
|
10 |
'இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி, |
வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும் |
|
பெரு மலை விடரகம் வர அரிது' என்னாய், |
|
வர எளிதாக எண்ணுதி; அதனால், |
|
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் |
|
15 |
தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள் |
அடைய முயங்கேம்ஆயின், யாமும் |
|
விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே |
|
அன்னை அறியினும் அறிக! அலர் வாய் |
|
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க! |
|
20 |
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு, |
ஒண் பூ வேங்கை கமழும் |
|
தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே! |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ, |
|
தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும், |
|
கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர், |
|
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய, |
|
5 |
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் |
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி, |
|
கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின், |
|
அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும் |
|
காணலாகா மாண் எழில் ஆகம் |
|
10 |
உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே |
நெடும் புற நிலையினை, வருந்தினைஆயின், |
|
முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும், |
|
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண், |
|
நோலா இரும் புள் போல, நெஞ்சு அமர்ந்து, |
|
15 |
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின், |
இருங் கழி முகந்த செங் கோல் அவ் வலை |
|
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் |
|
நெடுங் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து, |
|
யாணர்த் தண் பணை உறும் என, கானல் |
|
20 |
ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள் |
நல் எழில் சிதையா ஏமம் |
|
சொல் இனித் தெய்ய, யாம் தெளியுமாறே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
நனை விளை நறவின் தேறல் மாந்தி, |
|
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ, |
|
'பொம்மல் ஓதி எம் மகள் மணன்' என, |
|
வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால், |
|
5 |
புதுவது புனைந்த சேயிலை வெள் வேல், |
மதி உடம்பட்ட மை அணற் காளை |
|
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து, |
|
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு, நின் |
|
தண் நறு முச்சி புனைய, அவனொடு |
|
10 |
கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை, |
களிற்று இரை பிழைத்தலின், கய வாய் வேங்கை |
|
காய் சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ, |
|
இரும் பிடி இரியும் சோலை |
|
அருஞ் சுரம் சேறல் அயர்ந்தனென், யானே. |
|
தலைமகற்குப் போக்கு உடன்பட்ட தோழி தலைமகட்குப் போக்கு உடன்படச் சொல்லியது. - கயமனார் | |
உரை |
'பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர் |
|
மறந்தும் அமைகுவர்கொல்?' என்று எண்ணி, |
|
ஆழல் வாழி, தோழி! கேழல் |
|
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய் |
|
5 |
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர், |
காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங் காட்டு |
|
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும் |
|
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை, |
|
இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின் |
|
10 |
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் |
அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி |
|
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் |
|
நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட, |
|
நன் முகை அதிரல் போதொடு, குவளைத் |
|
15 |
தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின் |
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
செல்க, பாக! எல்லின்று பொழுதே |
|
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன் |
|
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா, |
|
கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை, |
|
5 |
கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல் இவுளி, |
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன, |
|
வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம் |
|
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி, |
|
சாந்து புலர் அகலம் மறுப்ப, காண்தக, |
|
10 |
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில், |
தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள் |
|
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த |
|
திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல் |
|
அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ, |
|
15 |
வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை என, |
சில் கோல் எல் வளை ஒடுக்கி, பல் கால் |
|
அருங் கடி வியல் நகர் நோக்கி, |
|
வருந்துமால், அளியள் திருந்திழைதானே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் | |
உரை |
'நுதல் பசந்தன்றே; தோள் சாயினவே; |
|
திதலை அல்குல் வரியும் வாடின; |
|
என் ஆகுவள்கொல் இவள்?' என, பல் மாண் |
|
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி, | |
5 |
இனையல் வாழி, தோழி! நனை கவுள் |
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு |
|
முன் நிலை பொறாஅது முரணி, பொன் இணர்ப் |
|
புலிக் கேழ் வேங்கைப் பூஞ் சினை புலம்ப, |
|
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல் |
|
10 |
செந் நிலப் படு நீறு ஆடி, செரு மலைந்து, |
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் |
|
பல இறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ, |
|
நோய் இலராக, நம் காதலர்! வாய் வாள், |
|
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின், |
|
15 |
வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை, |
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைப் |
|
பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன் |
|
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர், |
|
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர், |
|
20 |
இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து, |
எல் உமிழ் ஆவணத்து அன்ன, |
|
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே! |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது; பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர் | |
உரை |
பிரசப் பல் கிளை ஆர்ப்ப, கல்லென |
|
வரை இழி அருவி ஆரம் தீண்டித் |
|
தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில், |
|
கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக் |
|
5 |
கல் முகை நெடுஞ் சுனை நம்மொடு ஆடி, |
பகலே இனிது உடன் கழிப்பி, இரவே |
|
செல்வர்ஆயினும், நன்றுமன் தில்ல |
|
வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின் |
|
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று, |
|
10 |
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப் |
புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய் |
|
இரும் பிடி இரியும் சோலைப் |
|
பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லி யது. - அண்டர் மகன் குறுவழுதியார் | |
உரை |
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன் |
|
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென, |
|
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, |
|
கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி |
|
5 |
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் |
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண், |
|
நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி, |
|
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள் |
|
நம் இன்று ஆயினும் முடிக, வல்லென, |
|
10 |
பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்! |
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் |
|
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப, |
|
பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி |
|
நல் மா மேனி தொலைதல் நோக்கி, |
|
15 |
இனையல் என்றி; தோழி! சினைய |
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப் |
|
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து, |
|
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை, |
|
செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம் |
|
20 |
இன் இளவேனிலும் வாரார், |
'இன்னே வருதும்' எனத் தெளித்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள், வன்புறை எதிர் அழிந்து, சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
காண் இனி வாழி, தோழி! பானாள், |
|
மழை முழங்கு அரவம் கேட்ட, கழை தின், |
|
மாஅல் யானை புலி செத்து வெரீஇ, |
|
இருங் கல் விடரகம் சிலம்பப் பெயரும் |
|
5 |
பெருங் கல் நாடன் கேண்மை, இனியே, |
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண், |
|
மன்ற வேங்கை மண நாட் பூத்த |
|
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய் |
|
வியல் அறை வரிக்கும் முன்றில், குறவர் |
|
10 |
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும் |
ஆர் கலி விழவுக் களம் கடுப்ப, நாளும், |
|
விரவுப் பூம் பலியொடு விரைஇ, அன்னை |
|
கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி, |
|
'முருகு' என வேலற் தரூஉம். |
|
15 |
பருவமாகப் பயந்தன்றால், நமக்கே. |
தோழி தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்,சொல்லியது. - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் | |
உரை |
அலமரல் மழைக் கண் மல்கு பனி வார, நின் |
|
அலர் முலை நனைய, அழாஅல் தோழி! |
|
எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம் |
|
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென, |
|
5 |
ஊன் இல் யானை உயங்கும் வேனில், |
மறப் படைக் குதிரை, மாறா மைந்தின், |
|
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை |
|
முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல் |
|
பெருஞ் சோறு கொடுத்த ஞான்றை, இரும் பல் |
|
10 |
கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு, |
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த |
|
சுரன் இறந்து அகன்றனர்ஆயினும், மிக நனி |
|
மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ, |
|
பொருள்வயின் நீடலோஇலர் நின் |
|
15 |
இருள் ஐங் கூந்தல் இன் துயில் மறந்தே. |
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மாமூலனார் | |
உரை |
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின், |
|
ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென, |
|
மட மான் வல்சி தரீஇய, நடு நாள், |
|
இருள் முகைச் சிலம்பின், இரை வேட்டு எழுந்த |
|
5 |
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து, |
மடக் கண் ஆமான் மாதிரத்து அலற, |
|
தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு, |
|
நனந்தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி, |
|
இருங் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும் |
|
10 |
பெருங் கல் நாட! பிரிதிஆயின், |
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு |
|
இழை அணி நெடுந் தேர் களிறொடு என்றும் |
|
மழை சுரந்தன்ன ஈகை, வண் மகிழ், |
|
கழல் தொடித் தடக் கை, கலிமான், நள்ளி |
|
15 |
நளி முகை உடைந்த நறுங் கார் அடுக்கத்து, |
போந்தை முழு முதல் நிலைஇய காந்தள் |
|
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த |
|
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே? |
|
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - கபிலர் | |
உரை |
'உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார் |
|
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்' என |
|
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் |
|
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி, |
|
5 |
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில், |
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை |
|
வல் வில் இளையர் தலைவர், எல் உற, |
|
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை, |
|
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில், |
|
10 |
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள் |
கான யானை வெண் கோடு சுட்டி, |
|
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும் |
|
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற, |
|
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து |
|
15 |
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக் |
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண், |
|
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு |
|
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் |
|
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி, |
|
20 |
அம் மா அரிவை ஒழிய, |
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லிச், செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை |
|
நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர் |
|
அருள் இலர் வாழி, தோழி! பொருள் புரிந்து, |
|
இருங் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை, |
|
5 |
கருங் கோட்டு இருப்பை வெண் பூ முனையின், |
பெருஞ் செம் புற்றின் இருந் தலை இடக்கும் |
|
அரிய கானம் என்னார், பகை பட |
|
முனை பாழ்பட்ட ஆங்கண், ஆள் பார்த்துக் |
|
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும் |
|
10 |
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி, |
படு முடை நசைஇய பறை நெடுங் கழுத்தின் |
|
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக் |
|
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை மருதங் கிழார் மகனார் பெருங்கண்ணனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! பல் நாள் |
|
இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார் |
|
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை |
|
இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும் |
|
5 |
பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார் பூட்டி, |
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் |
|
ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ, |
|
நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண் |
|
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என் |
|
10 |
நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார் |
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ, |
|
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர் |
|
நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற |
|
புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை |
|
15 |
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த |
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து, |
|
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி, |
|
உழை மான் இன நிரை ஓடும் |
|
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நக்கீரனார் | |
உரை |
தூதும் சென்றன; தோளும் செற்றும்; |
|
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்; |
|
வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு |
|
நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின், |
|
5 |
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண் |
தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித் |
|
துனை கால் அன்ன புனை தேர்க் கோசர் |
|
தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில், |
|
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, |
|
10 |
தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர் |
பணியாமையின், பகை தலைவந்த |
|
மா கெழு தானை வம்ப மோரியர் |
|
புனை தேர் நேமி உருளிய குறைத்த |
|
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர், |
|
15 |
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை |
வாயுள் தப்பிய, அருங் கேழ், வயப் புலி |
|
மா நிலம் நெளியக் குத்தி, புகலொடு |
|
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை |
|
நிரம்பா நீள் இடைப் போகி, |
|
20 |
அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து |
|
வாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி |
|
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி, |
|
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப் |
|
5 |
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி, |
தனியன் வருதல் அவனும் அஞ்சான்; |
|
பனி வார் கண்ணேன் ஆகி, நோய் அட, |
|
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்; |
|
யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஈங்கைத் |
|
10 |
துய் அவிழ் பனி மலர் உதிர வீசித் |
தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப் |
|
பெருங் குளம் காவலன் போல, |
|
அருங் கடி அன்னையும் துயில் மறந்தனளே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொல்லியது. - நக்கண்ணையார் | |
உரை |
வேனிற் பாதிரிக் கூனி மா மலர் |
|
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம், |
|
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப, |
|
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின் |
|
5 |
பொம்மல் ஓதி பொதுள வாரி, |
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச் |
|
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின் |
|
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும் |
|
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள |
|
10 |
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை |
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி, |
|
வல்லுவைமன்னால் நடையே கள்வர் |
|
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார், |
|
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து, |
|
15 |
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து, |
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல் |
|
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும், |
|
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு |
|
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ, |
|
20 |
வெள் அரா மிளிர வாங்கும் |
பிள்ளை எண்கின் மலைவயினானே. |
|
உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் | |
உரை |
கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ |
|
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர, |
|
சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த் |
|
தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல் |
|
5 |
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி, சிலம்பு நகச் |
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின் |
|
அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி |
|
ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென |
|
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய், |
|
10 |
நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு, |
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை |
|
அருஞ் சுரத்து அல்கியேமே இரும் புலி |
|
களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு |
|
வில்லோர் குறும்பில் ததும்பும், |
|
15 |
வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே. |
புணர்ந்து உடன் போயின காலை, இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
மழை இல் வானம் மீன் அணிந்தன்ன, |
|
குழை அமல் முசுண்டை வாலிய மலர, |
|
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப் |
|
பெரிய சூடிய கவர் கோல் கோவலர், |
|
5 |
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு, |
நீர் திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர, |
|
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து, |
|
ஏர்தரு கடு நீர் தெருவுதொறு ஒழுக, |
|
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி, |
|
10 |
கூதிர் நின்றன்றால், பொழுதே! காதலர் |
நம் நிலை அறியார் ஆயினும், தம் நிலை |
|
அறிந்தனர்கொல்லோ தாமே ஓங்கு நடைக் |
|
காய் சின யானை கங்குல் சூழ, |
|
அஞ்சுவர இறுத்த தானை |
|
15 |
வெஞ் சின வேந்தன் பாசறையோரே? |
பருவம் கண்டு, வன்புறை எதிர் அழிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது;தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - உம்பற் காட்டு இளங்கண்ணனார் | |
உரை |
புகையின் பொங்கி, வியல் விசும்பு உகந்து, |
|
பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும் |
|
இமயச் செவ் வரை மானும்கொல்லோ? |
|
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் |
|
5 |
சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை |
நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ? |
|
எவன்கொல்? வாழி, தோழி! வயங்கு ஒளி |
|
நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல், |
|
குழற் குரல், பாவை இரங்க, நத்துறந்து, |
|
10 |
ஒண் தொடி நெகிழச் சாஅய், செல்லலொடு |
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய, பொறை அடைந்து, |
|
இன் சிலை எழில் ஏறு கெண்டி, புரைய |
|
நிணம் பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து எடுத்து, |
|
அணங்கு அரு மரபின் பேஎய் போல |
|
15 |
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க, |
துகள் அற விளைந்த தோப்பி பருகி, |
|
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர் |
|
புலாஅல் கையர், பூசா வாயர், |
|
ஒராஅ உருள் துடி குடுமிக் குராலொடு |
|
20 |
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும் |
செந் நுதல் யானை வேங்கடம் தழீஇ, |
|
வெம் முனை அருஞ் சுரம் இறந்தோர் |
|
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. -மாமூலனார் | |
உரை |
கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின் |
|
அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை, |
|
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ, |
|
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல் |
|
5 |
இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ, |
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண் |
|
நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலையாகி, |
|
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து, |
|
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே |
|
10 |
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் |
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார் |
|
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் |
|
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண், |
|
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன, |
|
15 |
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனி அஃது |
அவலம் அன்றுமன், எமக்கே; அயல |
|
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த |
|
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை |
|
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும் |
|
20 |
திரு மணி விளக்கின் அலைவாய்ச் |
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே! |
|
பரத்தையிற் பிரிந்து வந்து கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. -பரணர் | |
உரை |
அறியாய் வாழி, தோழி! பொறி வரிப் |
|
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த |
|
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை |
|
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் |
|
5 |
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய |
காமம் கலந்த காதல் உண்டுஎனின், |
|
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி; |
|
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின், |
|
யான் அலது இல்லை, இவ் உலகத்தானே |
|
10 |
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது, |
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த |
|
பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி, |
|
செய்து பின் இரங்கா வினையொடு |
|
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே! |
|
குறை வேண்டிப் பின் நின்ற தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி,தலைமகட்குக் குறை நயப்ப, கூறியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் | |
உரை |
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க! |
|
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக! |
|
ஏறுடை இன நிரை பெயர, பெயராது, |
|
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய |
|
5 |
தறுகணாளர் நல் இசை நிறுமார், |
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின், |
|
நட்ட போலும் நடாஅ நெடுங் கல் |
|
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி, |
|
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய |
|
10 |
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் |
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி |
|
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால் |
|
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர், |
|
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள், |
|
15 |
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் |
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர, |
|
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து |
|
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப, |
|
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ, |
|
20 |
திரு நுதல் மகளிர் குரவை அயரும் |
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை, |
|
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின் |
|
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த |
|
ஒண் செங் கழுநீர் அன்ன, நின் |
|
25 |
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப் |
|
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல் |
|
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு |
|
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி, |
|
5 |
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க, |
தனியன் வந்து, பனி அலை முனியான், |
|
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற |
|
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி |
|
அசையா நாற்றம் அசை வளி பகர, |
|
10 |
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக் |
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும், |
|
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு, |
|
'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி, |
|
உருவச் செந் தினை நீரொடு தூஉய், |
|
15 |
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ! |
என் ஆவது கொல்தானே பொன் என |
|
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய |
|
மணி நிற மஞ்ஞை அகவும் |
|
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? |
|
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த |
|
வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன் |
|
அடி அறிவுறுதல் அஞ்சி, பைபயக் |
|
கடி இலம் புகூஉம் கள்வன் போல, |
|
5 |
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு |
ஆவது ஆக! இனி நாண் உண்டோ? |
|
வருகதில் அம்ம, எம் சேரி சேர! |
|
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண, |
|
தாரும் தானையும் பற்றி, ஆரியர் |
|
10 |
பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல, |
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன் |
|
மார்பு கடி கொள்ளேன்ஆயின், ஆர்வுற்று |
|
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல், |
|
பரந்து வெளிப்படாது ஆகி, |
|
15 |
வருந்துகதில்ல, யாய் ஓம்பிய நலனே! |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - பரணர் | |
உரை |
பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய, |
|
செறி மடை அம்பின், வல் வில், கானவன் |
|
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு, |
|
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன், |
|
5 |
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப, |
வைந் நுதி வால மருப்பு ஒடிய உக்க |
|
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, |
|
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு, |
|
சாந்தம் பொறைமரம் ஆக, நறை நார் |
|
10 |
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு |
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து |
|
எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர் வாய் |
|
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்; |
|
சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி, |
|
15 |
யாயும், 'அவனே' என்னும்; யாமும், |
'வல்லே வருக, வரைந்த நாள்!' என, |
|
நல் இறை மெல் விரல் கூப்பி, |
|
இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே! |
|
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - தொல் கபிலன் | |
உரை |
குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை, |
|
இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய |
|
கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர், |
|
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென, |
|
5 |
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது, |
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென, |
|
அம் கண் பெண்ணை அன்புற நரலும் |
|
சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச் சேர்ப்பன், |
|
கழி சேர் புன்னை அழி பூங் கானல், |
|
10 |
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம் |
மணவா முன்னும் எவனோ தோழி! |
|
வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன் |
|
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை, |
|
சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல் |
|
15 |
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ, |
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே? |
|
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்,தலைமகள் சொல்லியது. - நக்கீரர் | |
உரை |
வானம் பெயல் வளம் கரப்ப, கானம் |
|
உலறி இலை இலவாக, பல உடன் |
|
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப, |
|
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப் |
|
5 |
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப் |
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு |
|
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல், |
|
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும் |
|
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை |
|
10 |
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த் |
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப, |
|
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர |
|
உவலை சூடிய தலையர், கவலை |
|
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும் |
|
15 |
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர |
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய் |
|
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று, |
|
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி, |
|
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி, |
|
20 |
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம் |
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு |
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப் |
|
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல், |
|
நல் எழில், மழைக் கண், நம் காதலி |
|
25 |
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண் கவினே. |
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ | |
உரை |
கூறாய், செய்வது தோழி! வேறு உணர்ந்து, |
|
அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென் முறிச் |
|
சிறு குளகு அருந்து, தாய் முலை பெறாஅ, |
|
மறி கொலைப் படுத்தல் வேண்டி, வெறி புரி |
|
5 |
ஏதில் வேலன் கோதை துயல்வரத் |
தூங்கும்ஆயின், அதூஉம் நாணுவல்; |
|
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல்; புலம் படர்ந்து, |
|
இரவின் மேயல் மரூஉம் யானைக் |
|
கால் வல் இயக்கம் ஒற்றி, நடு நாள், |
|
10 |
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன் |
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல் |
|
உடு உறு கணையின் போகி, சாரல் |
|
வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ, |
|
பலவின் பழத்துள் தங்கும் |
|
15 |
மலை கெழு நாடன் மணவாக்காலே! |
வெறி அச்சுறீஇ,தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப, |
|
குன்று கோடு அகைய, கடுங் கதிர் தெறுதலின், |
|
என்றூழ் நீடிய வேய் படு நனந்தலை, |
|
நிலவு நிற மருப்பின் பெருங் கை சேர்த்தி, |
|
5 |
வேங்கை வென்ற வெரு வரு பணைத் தோள் |
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி, |
|
பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும் |
|
கல்லுடை அதர கானம் நீந்தி, |
|
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் |
|
10 |
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து |
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல் |
|
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும், |
|
புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து, |
|
நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத் |
|
15 |
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர், |
பிழி ஆர் மகிழர், கலி சிறந்துஆர்க்கும் |
|
மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும், |
|
பழி தீர் மாண் நலம் தருகுவர்மாதோ |
|
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும் |
|
20 |
அம் கலுழ் கொண்ட செங் கடை மழைக் கண், |
மணம் கமழ் ஐம்பால், மடந்தை! நின் |
|
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
கோதை இணர, குறுங் கால், காஞ்சிப் |
|
போது அவிழ் நறுந் தாது அணிந்த கூந்தல், |
|
அரி மதர் மழைக் கண், மாஅயோளொடு |
|
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி, இன்றும் |
|
5 |
பெரு நீர் வையை அவளொடு ஆடி, |
புலரா மார்பினை வந்து நின்று, எம்வயின் |
|
கரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில் |
|
பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி |
|
நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும் |
|
10 |
பேர் இசைக் கொற்கைப் பொருநன், வென் வேல் |
கடும் பகட்டு யானை நெடுந் தேர் செழியன், |
|
மலை புரை நெடு நகர்க் கூடல் நீடிய |
|
மலிதரு கம்பலை போல, |
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே. |
|
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்கு வாயில் மறுக்கும் தோழி சொல்லியது. -மதுரைப் பேராலவாயார் | |
உரை |
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு |
|
வயங்கு தொழில் தரீஇயர், வலன் ஏர்பு விளங்கி, |
|
மல்கு கடல் தோன்றியாங்கு, மல்கு பட, |
|
மணி மருள் மாலை, மலர்ந்த வேங்கை |
|
5 |
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெருஞ் சினைத் |
தண் துளி அசைவளி தைவரும் நாட! |
|
கொன்று சினம் தணியாது, வென்று முரண் சாம்பாது, |
|
இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது, |
|
பெரும் பெயற் கடாஅம் செருக்கி, வள மலை |
|
10 |
இருங் களிறு இயல்வரும் பெருங் காட்டு இயவின், |
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி, |
|
தாழ் பூங் கோதை ஊது வண்டு இரீஇ, |
|
மென் பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு, இவண் |
|
நீ வந்ததனினும், இனிது ஆகின்றே |
|
15 |
தூவல் கள்ளின் துனை தேர், எந்தை |
கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும் |
|
யாய் அறிவுறுதல் அஞ்சி, பானாள், |
|
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன், |
|
யான் நின் கொடுமை கூற, நினைபு ஆங்கு, |
|
20 |
இனையல் வாழி, தோழி! நத் துறந்தவர் |
நீடலர் ஆகி வருவர், வல்லென; |
|
கங்குல் உயவுத் துணை ஆகிய |
|
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே! |
|
இரவுக்குறிக்கண் தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் | |
உரை |
'வறன் உறு செய்யின் வாடுபு வருந்தி, |
|
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல் |
|
சிறு நனி ஆன்றிகம்' என்றி தோழி! |
|
நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம் |
|
5 |
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு, |
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன |
|
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து, |
|
ஊர் இஃது என்னாஅர், தீது இல் வாழ்க்கை, |
|
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி, |
|
10 |
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்வர, |
குவி இணர் எருக்கின் ததர் பூங் கண்ணி |
|
ஆடூஉச் சென்னித் தகைப்ப, மகடூஉ, |
|
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக் |
|
களரி ஆவிரைக் கிளர் பூங் கோதை, |
|
15 |
வண்ண மார்பின் வன முலைத் துயல்வர, |
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக் |
|
குறு நெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப, |
|
கார் வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும் |
|
தேரை ஒலியின் மாண, சீர் அமைத்து, |
|
20 |
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு |
பல் ஊர் பெயர்வனர் ஆடி, ஒல்லென, |
|
தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப் பையர், |
|
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த |
|
புன் தலை மன்றம் காணின், வழி நாள், |
|
25 |
அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்; |
அதுவே மருவினம், மாலை; அதனால், |
|
காதலர் செய்த காதல் |
|
நீடு இன்று மறத்தல் கூடுமோ, மற்றே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - அதியன் விண்ணத்தனார் | |
உரை |
சிலம்பில் போகிய செம் முக வாழை |
|
அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும், |
|
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும் |
|
நல் வரை நாடனொடு அருவி ஆடியும், |
|
5 |
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும், |
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் |
|
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் |
|
அரிய போலும் காதல் அம் தோழி! |
|
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத |
|
10 |
கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல், |
கிளி பட விளைந்தமை அறிந்தும்,' செல்க' என, |
|
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச் |
|
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள முலை, |
|
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு, |
|
15 |
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே. |
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து, |
|
பேஎய் கண்ட கனவின், பல் மாண் |
|
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல், |
|
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன் |
|
5 |
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை |
மா இருங் கொல்லி உச்சித் தாஅய், |
|
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர் |
|
புலம் கந்தாக இரவலர் செலினே, |
|
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும் |
|
10 |
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் |
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி, |
|
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு |
|
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப் |
|
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு, |
|
15 |
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்! |
ஐயம் தெளியரோ, நீயே; பல உடன் |
|
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர் |
|
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து, |
|
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர் |
|
20 |
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே. |
தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஒளவையார் | |
உரை |
'சிறு நுதல் பசந்து, பெருந் தோள் சாஅய், |
|
அகல் எழில் அல்குல் அவ் வரி வாட, |
|
பகலும் கங்குலும் மயங்கி, பையென, |
|
பெயல் உறு மலரின் கண் பனி வார, |
|
5 |
ஈங்கு இவள் உழக்கும்' என்னாது, வினை நயந்து, |
நீங்கல் ஒல்லுமோ ஐய! வேங்கை |
|
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை |
|
மையல் அம் கடாஅம் செருக்கி, மதம் சிறந்து, |
|
இயங்குநர்ச் செகுக்கும் எய் படு நனந்தலை, |
|
10 |
பெருங் கை எண்கினம் குரும்பி தேரும் |
புற்றுடைச் சுவர புதல் இவர் பொதியில், |
|
கடவுள் போகிய கருந் தாட் கந்தத்து |
|
உடன் உறை பழமையின் துறத்தல்செல்லாது, |
|
இரும் புறாப் பெடையொடு பயிரும் |
|
15 |
பெருங் கல் வைப்பின் மலைமுதல் ஆறே? |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் | |
உரை |
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் |
|
நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல் |
|
ஆலி அழி துளி பொழிந்த வைகறை, |
|
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின், |
|
5 |
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ, |
கலம் சுடு புகையின் தோன்றும் நாட! |
|
இரவின் வருதல் எவனோ? பகல் வரின், |
|
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை |
|
களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்து, |
|
10 |
சிறு தினைப் படு கிளி எம்மொடு ஓப்பி, |
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத் |
|
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய |
|
கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட, |
|
காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய |
|
15 |
பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை, |
கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன், ஊர்க்கே. |
|
/slet/servlet/l1270.l1270exp?x=673&y=674&bk=308&z=l1270c32.htm |
இரவு வருவானைப் 'பகல் வருக' என்றது. - பிசிராந்தையார் |
உரை |
வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி, |
|
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர், |
|
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென, |
|
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் |
|
5 |
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய், |
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை, |
|
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து |
|
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம் |
|
காடு மிக நெடிய என்னார், கோடியர் |
|
10 |
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன் |
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு, |
|
நாம் செலின், எவனோ தோழி! காம்பின் |
|
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக் |
|
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது, |
|
15 |
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம் |
தண் பெரு படாஅர் வெரூஉம் |
|
குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் | |
உரை |
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று, |
|
அருங் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை, |
|
எழுதியன்ன திண் நிலைக் கதவம் |
|
கழுது வழங்கு அரை நாள், காவலர் மடிந்தென, |
|
5 |
திறந்து நப் புணர்ந்து, 'நும்மின் சிறந்தோர் |
இம்மை உலகத்து இல்' எனப் பல் நாள் |
|
பொம்மல் ஓதி நீவிய காதலொடு, |
|
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப, |
|
வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர் |
|
10 |
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி |
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும் |
|
புல்லி நல் நாட்டு உம்பர், செல் அருஞ் |
|
சுரம் இறந்து ஏகினும், நீடலர் |
|
அருள் மொழித் தேற்றி, நம் அகன்றிசினோரே. |
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
கான மான் அதர் யானையும் வழங்கும்; |
|
வான மீமிசை உருமும் நனி உரறும்; |
|
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய; |
|
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி |
|
5 |
வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம் |
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும், |
|
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட! |
|
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ |
|
இன்று தலையாக வாரல்; வரினே, |
|
10 |
ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய, |
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின் |
|
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை, |
|
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு |
|
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின் |
|
15 |
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே! |
இரவுக்குறி வந்த தலைமகனை வரவு விலக்கி வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
பசித்த யானைப் பழங்கண் அன்ன |
|
வறுஞ் சுனை முகந்த கோடைத் தெள் விளி |
|
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப, |
|
கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு |
|
5 |
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது, |
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப் |
|
படு மணி இன நிரை உணீஇய, கோவலர் |
|
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல், |
|
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும் |
|
10 |
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர், |
துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ? |
|
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு |
|
எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ? |
|
எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே! |
|
15 |
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ, |
யாய் அறிவுறுதல் அஞ்சி, |
|
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே. |
|
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார் | |
உரை |
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு, |
|
மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்; |
|
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப, |
|
இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர, |
|
5 |
பாம்பு எறி கோலின் தமியை வைகி, |
5 |
|
தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக் |
|
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின், |
|
ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன் |
|
10 |
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில், |
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக் |
|
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல், |
|
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப |
|
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை, |
|
15 |
புகல் அரும், பொதியில் போலப் |
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே! |
|
அல்லகுறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
இம்மென் பேர் அலர், இவ் ஊர், நம்வயின் |
|
செய்வோர் ஏச் சொல் வாட, காதலர் |
|
வருவர் என்பது வாய்வதாக, |
|
ஐய, செய்ய, மதன் இல, சிறிய நின் |
|
5 |
அடி நிலன் உறுதல் அஞ்சி, பையத் |
தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலி, |
|
காணிய வம்மோ? கற்பு மேம்படுவி! |
|
பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து, |
|
யானைச் செல் இனம் கடுப்ப, வானத்து |
|
10 |
வயங்கு கதிர் மழுங்கப் பாஅய், பாம்பின் |
பை பட இடிக்கும் கடுங் குரல் ஏற்றொடு |
|
ஆலி அழி துளி தலைஇக் |
|
கால் வீழ்த்தன்று, நின் கதுப்பு உறழ் புயலே! |
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பறநாட்டுப் பெருங்கொற்றனார் | |
உரை |
அம்ம! வாழி, தோழி! காதலர், |
|
'வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர், |
|
நளி இருங் கங்குல் புணர் குறி வாய்த்த |
|
களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும் |
|
5 |
உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது |
இவண் உறைபு எவனோ? அளியள்!' என்று அருளி, |
|
'ஆடு நடைப் பொலிந்த புகற்சியின், நாடு கோள் |
|
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை, |
|
வள் உயிர் மாக் கிணை கண் அவிந்தாங்கு, |
|
10 |
மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ் சுரம் |
வெய்யமன்ற; நின் வை எயிறு உணீஇய, |
|
தண் மழை ஒரு நாள் தலையுக! ஒள் நுதல், |
|
ஒல்கு இயல், அரிவை! நின்னொடு செல்கம்; |
|
சில் நாள் ஆன்றனைஆக' என, பல் நாள், |
|
15 |
உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ, |
எல்லாம் பெரும் பிறிதாக, வடாஅது, |
|
நல் வேற் பாணன் நல் நாட்டு உள்ளதை, |
|
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை, |
|
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் |
|
20 |
சோலை அத்தம் மாலைப் போகி, |
ஒழியச் சென்றோர்மன்ற; |
|
பழி எவன் ஆம்கொல், நோய் தரு பாலே? |
|
கொண்டு நீங்கக் கருதி ஒழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
ஊரல் அவ் வாய் உருத்த தித்தி, |
|
பேர் அமர் மழைக் கண், பெருந் தோள், சிறு நுதல், |
|
நல்லள் அம்ம, குறுமகள் செல்வர் |
|
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், |
|
5 |
நெடுங் கொடி நுடங்கும் மட்ட வாயில், |
இருங் கதிர்க் கழனிப் பெருங் கவின் அன்ன |
|
நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து, |
|
விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல் |
|
இழை அணி யானைச் சோழர் மறவன் |
|
10 |
கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை, |
புனல் மலி புதவின், போஒர் கிழவோன், |
|
பழையன் ஓக்கிய வேல் போல், |
|
பிழையல கண், அவள் நோக்கியோர் திறத்தே! |
|
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர் | |
உரை |
வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர் |
|
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு, |
|
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து, |
|
அரவின் பைந் தலை இடறி, பானாள் |
|
5 |
இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி, |
துனி கண் அகல அளைஇ, கங்குலின் |
|
இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல் |
|
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம்ஆயின், |
|
இலங்கு வளை நெகிழ, பரந்து படர் அலைப்ப, யாம் |
|
10 |
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு |
அடக்குவம்மன்னோ தோழி! மடப் பிடி |
|
மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று, |
|
கழை தின் யாக்கை விழை களிறு தைவர, |
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும் |
|
15 |
சாரல் நாடன் சாயல் மார்பே! |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் | |
உரை |
பூங் கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து, |
|
ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து, |
|
வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர் |
|
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர், |
|
5 |
படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர் |
கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப் |
|
பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து, |
|
எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து, |
|
ஏகுவர்கொல்லோ தாமே பாய் கொள்பு, |
|
10 |
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குருை |
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட |
|
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில், |
|
புலி புக்கு ஈனும் வறுஞ் சுனை, |
|
பனி படு சிமையப் பல் மலை இறந்தே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது; பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - உறையூர் முதுகூத்தனார் | |
உரை |
முளை வளர் முதல மூங்கில் முருக்கி, |
|
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை, |
|
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய, |
|
பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக் |
|
5 |
குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ, |
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி, |
|
செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால் |
|
யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து, |
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் |
|
10 |
நின் புரை தக்க சாயலன் என, நீ |
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல் |
|
வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு |
|
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் |
|
வண்டு இடைப் படாஅ முயக்கமும், |
|
15 |
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே! |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. -கபிலர் | |
உரை |
'யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின் |
|
ஆக மேனி அம் பசப்பு ஊர, |
|
அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின் |
|
பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு |
|
5 |
தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின் |
எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள் |
|
வயங்காதுஆயினும் பயம் கெடத் தூக்கி, |
|
நீடலர் வாழி, தோழி! கோடையில், |
|
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது, |
|
10 |
தூம்புடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய, |
வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து, |
|
யானைப் பெரு நிரை வானம் பயிரும் |
|
மலை சேண் இகந்தனர்ஆயினும், நிலை பெயர்ந்து, |
|
நாள் இடைப்படாமை வருவர், நமர்' என, |
|
15 |
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியா |
நின் வாய் இன் மொழி நல் வாயாக |
|
வருவர் ஆயினோ நன்றே; வாராது, |
|
அவணர் காதலர்ஆயினும், இவண் நம் |
|
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல |
|
20 |
சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி, |
மறுதரல் உள்ளத்தர்எனினும், |
|
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே. |
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய |
|
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க, |
|
நாடு திறை கொண்டனம்ஆயின் பாக! |
|
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு |
|
5 |
பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து, |
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ, |
|
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் |
|
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி, |
|
பெயல் தொடங்கின்றால், வானம்; வானின் |
|
10 |
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப, |
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக் |
|
கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது, |
|
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து, |
|
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப, |
|
15 |
ஈண்டே காண்க் கடவுமதி பூங் கேழ்ப்
|
பொலிவன அமர்த்த உண்கண், |
|
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே! |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் கூத்தனார் | |
உரை |
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் |
|
அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல் |
|
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல் |
|
யானும் அறிவென்மன்னே; யானை தன் |
|
5 |
கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து, |
இன்னா வேனில் இன் துணை ஆர, |
|
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட, |
|
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம் |
|
அரிய அல்லமன், நமக்கே விரி தார் |
|
10 |
ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன் |
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ, |
|
நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால், |
|
தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து யாத்த |
|
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின் |
|
15 |
பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு, |
வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய, |
|
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின், |
|
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ |
|
வார் உறு கவரியின் வண்டு உண விரிய, |
|
20 |
முத்தின் அன்ன வெள் வீ தாஅய், |
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி |
|
நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப் |
|
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய் |
|
நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று |
|
25 |
அமிழ்தம் ஊறும் செவ் வாய், |
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே! |
|
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார் | |
உரை |
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப் |
|
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த |
|
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய, |
|
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய் |
|
5 |
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின், |
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர் |
|
நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின் |
|
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க் |
|
காஞ்சி நீழல் குரவை அயரும் |
|
10 |
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன் |
தேர் தர வந்த நேர் இழை மகளிர் |
|
ஏசுப என்ப, என் நலனே; அதுவே |
|
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக் |
|
கொல் களிற்று யானை நல்கல்மாறே; |
|
15 |
தாமும் பிறரும் உளர்போல் சேறல் |
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின், |
|
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச் |
|
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, |
|
என்னொடு திரியானாயின், வென் வேல் |
|
20 |
மாரி அம்பின் மழைத் தோற் சோழர் |
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை, |
|
ஆரியர் படையின் உடைக, என் |
|
நேர் இறை முன்கை வீங்கிய வளையே! |
|
நயப் புப்பரத்தை இற் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - பாவைக் கொட்டிலார் | |
உரை |
நகை நன்று அம்ம தானே இறை மிசை |
|
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன |
|
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல், |
|
வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து, |
|
5 |
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர் |
காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை |
|
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து, |
|
பெருஞ் செய் நெல்லின் பாசு அவல் பொத்தி, |
|
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை |
|
10 |
மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப் |
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர! |
|
யாம் அது பேணின்றோ இலமே நீ நின் |
|
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி, |
|
மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப, |
|
15 |
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி, |
எம் மனை வாராயாகி, முன் நாள், |
|
நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக் |
|
குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந் தேர், |
|
இழை அணி யானைப் பழையன் மாறன், |
|
20 |
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண், |
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த |
|
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய், |
|
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி, |
|
ஏதில் மன்னர் ஊர் கொள, |
|
25 |
கோதை மார்பன் உவகையின் பெரிதே. |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - நக்கீரர் | |
உரை |
தோளும் தொல் கவின் தொலைய, நாளும் |
|
நலம் கவர் பசலை நல்கின்று நலிய, |
|
சால் பெருந் தானைச் சேரலாதன் |
|
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய |
|
5 |
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன, |
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி |
|
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய, |
|
சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே |
|
வாய்க்கதில் வாழி, தோழி! வாயாது, |
|
10 |
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து, |
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, குவவு அடி |
|
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ, |
|
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி |
|
கை தலை வைத்த மையல் விதுப்பொடு, |
|
15 |
கெடு மகப் பெண்டிரின் தேரும் |
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே! |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
என் ஆவதுகொல் தானே முன்றில், |
|
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து, |
|
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி, |
|
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ, |
|
5 |
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல் |
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல் |
|
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக் |
|
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர், |
|
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி, |
|
10 |
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி, |
'யானை வவ்வின தினை' என, நோனாது, |
|
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, |
|
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் |
|
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் | |
உரை |
அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை |
|
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய, |
|
எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! ஞெமன்ன் |
|
தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி, |
|
5 |
உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே, |
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக, |
|
அருங் குறும்பு எறிந்த பெருங் கல வெறுக்கை |
|
சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு, |
|
எழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள, |
|
10 |
திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை |
எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன் |
|
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை |
|
கல் ஊர் பாம்பின் தோன்றும் |
|
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே? |
|
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
மத வலி யானை மறலிய பாசறை, |
|
இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப, |
|
வென்று கொடி எடுத்தனன், வேந்தனும்; கன்றொடு |
|
கறவைப் புல்லினம் புறவுதொறு உகள, |
|
5 |
குழல் வாய் வைத்தனர் கோவலர், வல் விரைந்து, |
இளையர் ஏகுவனர் பரிய, விரி உளைக் |
|
கடு நடைப் புரவி வழிவாய் ஓட, |
|
வலவன் வள்பு வலி உறுப்ப, புலவர் |
|
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்து, |
|
10 |
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய, |
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின், |
|
யாண்டு உறைவதுகொல் தானே மாண்ட |
|
போது உறழ் கொண்ட உண்கண் |
|
தீதிலாட்டி திரு நுதற் பசப்பே? |
|
வினை முற்றிய தலைமகற்கு உழையார் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார் | |
உரை |
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை |
|
உகு வார் அருந்த, பகு வாய் யாமை |
|
கம்புள் இயவன் ஆக, விசி பிணித் |
|
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் |
|
5 |
இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டு, என் |
பொற் தொடி முன்கை பற்றினனாக, |
|
'அன்னாய்!' என்றனென்; அவன் கை விட்டனனே, |
|
தொல் நசை சாலாமை, நன்னன் பறம்பில் |
|
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய |
|
10 |
கற் போல் நாவினேனாகி. மற்று அது
|
செப்பலென் மன்னால், யாய்க்கே; நல் தேர்க் |
|
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன் |
|
நெடுங் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் |
|
நல்லடி உள்ளானாகவும், ஒல்லார் |
|
15 |
கதவம் முயறலும் முயல்ப; அதாஅன்று, |
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது, |
|
கொன்றனன்ஆயினும் கொலை பழுது அன்றே |
|
அருவி ஆம்பல் கலித்த முன்துறை |
|
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன |
|
20 |
மின் ஈர் ஓதி! என்னை, நின் குறிப்பே? |
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக் கூறியது.-பரணர் | |
உரை |
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த |
|
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த |
|
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய, |
|
தட மருப்பு யானை வலம் படத் தொலைச்சி, |
|
5 |
வியல் அறை சிவப்ப வாங்கி, முணங்கு நிமிர்ந்து, |
புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி |
|
பயில் இருங் கானத்து வழங்கல்செல்லாது, |
|
பெருங் களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும், |
|
தீம் சுளைப் பலவின் தொழுதி, உம்பற் |
|
10 |
பெருங் காடு இறந்தனர்ஆயினும், யாழ நின் |
திருந்து இழைப் பணைத் தோள் வருந்த நீடி, |
|
உள்ளாது அமைதலோ இலரே; நல்குவர் |
|
மிகு பெயல் நிலைஇய தீம் நீர்ப் பொய்கை |
|
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் |
|
15 |
காலொடு துயல்வந்தன்ன, நின் |
ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
உரை |
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின், |
|
காமர் பீலி, ஆய் மயில் தோகை |
|
இன் தீம் குரல துவன்றி, மென் சீர் |
|
ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி, |
|
5 |
கண் நேர் இதழ, தண் நறுங் குவளைக் |
குறுந் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை |
|
நீடு நீர் நெடுஞ் சுனை ஆயமொடு ஆடாய், |
|
உயங்கிய மனத்தையாகி, புலம்பு கொண்டு, |
|
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி, |
|
10 |
அன்னை வினவினள்ஆயின், அன்னோ! |
என் என உரைக்கோ யானே துன்னிய |
|
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி, |
|
ஓடை யானை உயர் மிசை எடுத்த |
|
ஆடு கொடி கடுப்ப, தோன்றும் |
|
15 |
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே? |
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
'பனி வார் உண்கணும், பசந்த தோளும், |
|
நனி பிறர் அறியச் சாஅய், நாளும், |
|
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார், |
|
நீடினர்மன்னோ, காதலர்' என நீ |
|
5 |
எவன் கையற்றனை? இகுளை! அவரே |
வானவரம்பன் வெளியத்து அன்ன நம் |
|
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது, |
|
அருஞ் சுரக் கவலை அசைஇய கோடியர், |
|
பெருங் கல் மீமிசை, இயம் எழுந்தாங்கு, |
|
10 |
வீழ் பிடி கெடுத்த நெடுந் தாள் யானை |
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும், |
|
பொய்யா நல் இசை மா வண் புல்லி, |
|
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந் தாள் |
|
முதைத் சுவல் மூழ்கிய, கான் சுடு குரூஉப் புகை |
|
15 |
அருவித் துவலையொடு மயங்கும் |
பெரு வரை அத்தம் இயங்கியோரே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.-மாமூலனார் | |
உரை |
பல் பூந் தண் பொழில், பகல் உடன் கழிப்பி, |
|
ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன் |
|
குடவயின் மா மலை மறைய, கொடுங் கழித் |
|
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல் |
|
5 |
நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப, |
வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து |
|
உரு உடன் இயைந்த தோற்றம் போல, |
|
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ, |
|
வந்த மாலை பெயரின், மற்று இவள் |
|
10 |
பெரும் புலம்பினளே தெய்ய; அதனால், |
பாணி பிழையா மாண் வினைக் கலி மா |
|
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி, |
|
நெடுந் தேர் அகல நீக்கி, பையெனக் |
|
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி, |
|
15 |
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப! |
இன மீன் அருந்து நாரையொடு பனைமிசை |
|
அன்றில் சேக்கும் முன்றில், பொன் என |
|
நல் மலர் நறு வீ தாஅம் |
|
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே. |
|
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்தது. - மதுரைக் கண்ணத்தனார் | |
உரை |
பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறைத் |
|
தேம் கலந்து ஒழுக, யாறு நிறைந்தனவே; |
|
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து, |
|
பைங் கண் வல்லியம் கல் அளைச் செறிய, |
|
5 |
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு |
கடி கொள, வழங்கார் ஆறே; ஆயிடை |
|
எல்லிற்று என்னான், வென் வேல் ஏந்தி, |
|
நசை தர வந்த நன்னராளன் |
|
நெஞ்சு பழுதாக, வறுவியன் பெயரின், |
|
10 |
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே; |
எவன்கொல்? வாழி, தோழி! நம் இடை முலைச் |
|
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும், |
|
சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிப்பின் |
|
இலங்கு வெள் அருவி போலவும், |
|
15 |
நிலம் கொண்டனவால், திங்கள் அம் கதிரே! |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார் | |
உரை |
அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப, |
|
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு |
|
சினவல் போகிய புன்கண் மாலை, |
|
அத்த நடுகல் ஆள் என உதைத்த |
|
5 |
கான யானைக் கதுவாய் வள் உகிர், |
இரும் பனை இதக்கையின், ஒடியும் ஆங்கண், |
|
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை, |
|
வருநர் இன்மையின் களையுநர்க் காணா |
|
என்றூழ் வெஞ் சுரம் தந்த நீயே |
|
10 |
துயர் செய்து ஆற்றாயாகி, பெயர்பு, ஆங்கு |
உள்ளினை வாழிய, நெஞ்சே! வென் வேல் |
|
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண், |
|
பூதம் தந்த பொரி அரை வேங்கைத் |
|
தண் கமழ் புது மலர் நாறும் |
|
15 |
அம் சில் ஓதி ஆய் மடத் தகையே. |
தலைமகன் இடைச் சுரத்து நின்று சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம், |
|
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து, |
|
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும் |
|
ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக |
|
5 |
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய |
குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை, |
|
மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன் |
|
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக் |
|
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில், |
|
10 |
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீம் நீர் |
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி, |
|
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள் |
|
கழியாமையே வழிவழிப் பெருகி, |
|
அம் பணை விளைந்த தேக் கட் தேறல் |
|
15 |
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர், |
எவன்கொல் வாழி, தோழி! கொங்கர் |
|
மணி அரை யாத்து மறுகின் ஆடும் |
|
உள்ளி விழவின் அன்ன, |
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே? |
|
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
முனை கவர்ந்து கொண்டென, கலங்கி, பீர் எழுந்து, |
|
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து, |
|
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சி, |
|
செது காழ் சாய்ந்த முது காற் பொதியில், |
|
5 |
அருஞ் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று, |
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர, |
|
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப, |
|
தாழ் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு, |
|
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்; |
|
10 |
இரும் பல் கூந்தல், சேயிழை, மடந்தை, |
கனை இருள் நடு நாள், அணையொடு பொருந்தி, |
|
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு, ஐது உயிரா, |
|
ஆய் இதழ் மழைக் கண் மல்க, நோய் கூர்ந்து, |
|
பெருந் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி |
|
15 |
மெல் விரல் உகிரின் தெறியினள், வென் வேல் |
அண்ணல் யானை அடு போர் வேந்தர் |
|
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில் |
|
ஓர் எயில் மன்னன் போல, |
|
துயில் துறந்தனள்கொல்? அளியள் தானே! | |
பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் | |
உரை |
'சென்று நீடுநர்அல்லர்; அவர்வயின் |
|
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை! |
|
அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர் |
|
கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும் |
|
5 |
கல்லா இளையர் கலித்த கவலை, |
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும் |
|
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல், |
|
அத்த எருவைச் சேவல் சேர்ந்த |
|
அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல், |
|
10 |
எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன் |
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி |
|
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார், |
|
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி, |
|
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி, |
|
15 |
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும், |
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர் |
|
நோய் இலர் பெயர்தல் அறியின், |
|
ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - இடையன் சேந்தங் கொற்றனார் | |
உரை |
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன் |
|
கல்லா யானை கடி புனல் கற்றென, |
|
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை, |
|
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, |
|
5 |
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண, |
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை |
|
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள, |
|
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று, |
|
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப, |
|
10 |
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து, |
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ! |
|
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின் |
|
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின் |
|
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி, |
|
15 |
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய, |
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக் |
|
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன் |
|
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே! |
|
காதற்பரத்தை புலந்து சொல்லியது. - பரணர் | |
உரை |
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய, |
|
தெருளாமையின் தீதொடு கெழீஇ, |
|
அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து, |
|
ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே! |
|
5 |
நினையினைஆயின், எனவ கேண்மதி! |
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை, |
|
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி, |
|
நனவின் இயன்றதுஆயினும், கங்குல் |
|
கனவின் அற்று, அதன் கழிவே; அதனால், |
|
10 |
விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி, |
சுவல்மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி |
|
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப, |
|
செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு, |
|
எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி, |
|
15 |
மெய் புகுவன்ன கை கவர் முயக்கின் |
மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின் |
|
பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி, |
|
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு |
|
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு, |
|
20 |
உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல், |
அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள் |
|
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர, |
|
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு நின்று, |
|
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப் |
|
25 |
பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த |
நிரம்பா நீள் இடைத் தூங்கி, |
|
இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே? |
|
முன் ஒரு காலத்துப் பொருள் முற்றிவந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
381. பாலை |
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல் |
|
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப, |
|
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும் |
|
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப, |
|
5 |
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் |
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை, |
|
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர் |
|
வில் சினம் தணிந்த வெருவரு கவலை, |
|
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை |
|
10 |
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி, |
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து, |
|
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும் |
|
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார் |
|
முனை அரண் கடந்த வினை வல் தானை, |
|
15 |
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய |
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல, |
|
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது உயிர்த்து, |
|
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண, |
|
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை |
|
20 |
எதிர் மலர் இணைப் போது அன்ன, தன் |
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே! |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை இளங்கௌசிகனார் | |
உரை |
தன் ஓரன்ன ஆயமும், மயில் இயல் |
|
என் ஓரன்ன தாயரும், காண, |
|
கை வல் யானைக் கடுந் தேர்ச் சோழர் |
|
காவிரிப் படப்பை உறந்தை அன்ன |
|
5 |
பொன்னுடை நெடு நகர், புரையோர் அயர, |
நல் மாண் விழவில் தகரம் மண்ணி, |
|
யாம் பல புணர்ப்பச் சொல்லாள், காம்பொடு |
|
நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன், |
|
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் |
|
10 |
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ, |
வளையுடை முன்கை அளைஇ, கிளைய |
|
பயில் இரும் பிணையல் பசுங் காழ்க் கோவை |
|
அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல் |
|
ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும், |
|
15 |
தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி, |
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச் |
|
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ, |
|
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே. |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
திருந்துஇழை நெகிழ்ந்து, பெருந் தோள் சாஅய், |
|
அரி மதர் மழைக் கண் கலுழச் செல்வீர்! |
|
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ |
|
பூக் கண் பறைந்த புன் தலைச் சிறாஅரொடு |
|
5 |
அவ் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப் |
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய |
|
பூந் துகில் இமைக்கும், பொலன் காழ் அல்குல், |
|
அவ் வரி சிதைய நோக்கி, வெவ் வினைப் |
|
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ, |
|
10 |
வரிப் புற இதலின் மணிக் கட் பேடை |
நுண் பொறி அணிந்த எருத்தின், கூர் முட் |
|
செங் கால், சேவல் பயிரும் ஆங்கண், |
|
வில் ஈண்டு அருஞ் சமம் ததைய நூறி, |
|
நல் இசை நிறுத்த நாணுடை மறவர் |
|
15 |
நிரை நிலை நடுகல் பொருந்தி, இமையாது, |
இரை நசைஇக் கிடந்த முது வாய்ப் பல்லி |
|
சிறிய தெற்றுவதுஆயின், 'பெரிய |
|
ஓடை யானை உயர்ந்தோர்ஆயினும், |
|
நின்றாங்குப் பெயரும் கானம் |
|
20 |
சென்றோர்மன்' என இருக்கிற்போர்க்கே. |
தலைமகளது குறிப்பு அறிந்து, தோழி தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி நம் மலை |
|
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த் தட்டையின், |
|
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத |
|
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை அமல் |
|
5 |
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி, |
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ |
|
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து, |
|
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி |
|
இன் இசை ஓரா இருந்தனமாக, |
|
10 |
'மை ஈர் ஓதி மட நல்லீரே! |
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து, |
|
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் |
|
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?' என, |
|
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட, |
|
15 |
சொல்லிக் கழிந்த வல் விற் காளை |
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து, |
|
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள், |
|
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, 'வெறி' என, |
|
அன்னை தந்த முது வாய் வேலன், |
|
20 |
'எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்; |
தணி மருந்து அறிவல்' என்னும்ஆயின், |
|
வினவின் எவனோ மற்றே 'கனல் சின |
|
மையல் வேழ மெய் உளம்போக, |
|
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு |
|
25 |
காட்டு மான் அடி வழி ஒற்றி, |
வேட்டம் செல்லுமோ, நும் இறை?' எனவே? |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - ஊட்டியார் | |
உரை |
அறியாய் வாழி, தோழி! நெறி குரல் |
|
சாந்து ஆர் கூந்தல் உளரி, போது அணிந்து, |
|
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும், |
|
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட |
|
5 |
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும், |
பெருந் தோள் தொய்யில் வரித்தும், சிறு பரட்டு |
|
அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும், |
|
எற் புறந்தந்து, நிற் பாராட்டி, |
|
பல் பூஞ் சேக்கையின் பகலும் நீங்கார், |
|
10 |
மனைவயின் இருப்பவர்மன்னே துனைதந்து, |
இரப்போர் ஏந்து கை நிறைய, புரப்போர் |
|
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும் |
|
அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர் |
|
சிறு புன் கிளவிச் செல்லல் பாழ்பட, |
|
15 |
நல் இசை தம் வயின் நிறுமார், வல் வேல் |
வான வரம்பன் நல் நாட்டு உம்பர், |
|
வேனில் நீடிய வெங் கடற்று அடை முதல், |
|
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற, |
|
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும் |
|
20 |
பெருங் களிறு தொலைச்சிய இருங் கேழ் ஏற்றை |
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி, |
|
வலம் படு வென்றியொடு சிலம்பகம் சிலம்ப, |
|
படு மழை உருமின் முழங்கும் |
|
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரனார் | |
உரை |
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன |
|
வரி மென் முகைய நுண் கொடி அதிரல் |
|
மல்கு அகல் வட்டியர், கொள்வு இடம் பெறாஅர் |
|
விலைஞர், ஒழித்த தலை வேய் கான் மலர் |
|
5 |
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி, |
தண் நறுங் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என் |
|
பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப் |
|
பழ அணி உள்ளப்படுமால் தோழி! |
|
இன்றொடு சில் நாள் வரினும், சென்று, நனி |
|
10 |
படாஅவாகும், எம் கண்ணே கடாஅ |
வான் மருப்பு அசைத்தல்செல்லாது, யானை தன் |
|
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை |
|
குன்று புகு பாம்பின் தோன்றும், |
|
என்றூழ் வைப்பின், சுரன் இறந்தோரே! |
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் | |
உரை |
தாழ் பெருந் தடக் கை தலைஇய, கானத்து, |
|
வீழ் பிடி கெடுத்த, வெண் கோட்டு யானை |
|
உண் குளகு மறுத்த உயக்கத்தன்ன, |
|
பண்புடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇ, |
|
5 |
பின்னிலை முனியானாகி, 'நன்றும், |
தாது செய் பாவை அன்ன தையல், |
|
மாதர் மெல் இயல், மட நல்லோள்வயின் |
|
தீது இன்றாக, நீ புணை புகுக!' என |
|
என்னும் தண்டும்ஆயின், மற்று அவன் |
|
10 |
அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே |
ஒல் இனி, வாழி, தோழி! கல்லெனக் |
|
கண மழை பொழிந்த கான் படி இரவில், |
|
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட, |
|
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த |
|
15 |
வல் வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென, |
மறப் புலி உரற, வாரணம் கதற, |
|
நனவுறு கட்சியின் நல் மயில் ஆல, |
|
மலை உடன் வெரூஉம் மாக் கல் வெற்பன் |
|
பிரியுநன் ஆகலோ அரிதே; அதாஅன்று, |
|
20 |
உரிதுஅல் பண்பின் பிரியுனன்ஆயின், |
வினை தவப் பெயர்ந்த வென் வேல் வேந்தன் |
|
முனைகொல் தானையொடு முன் வந்து இறுப்ப, |
|
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை |
|
ஆற்றாமையின், பிடித்த வேல் வலித் |
|
25 |
தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற, |
விழை தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின் |
|
கான் அமர் நன்னன் போல, |
|
யான் ஆகுவல், நின் நலம் தருவேனே. |
|
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - மோசிகீரனார் | |
உரை |
'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர, |
|
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ, |
|
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை |
|
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய |
|
5 |
பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து, |
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான், |
|
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று, |
|
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க, |
|
நன்று புறமாறி அகறல், யாழ நின் |
|
10 |
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ? |
கரை பொரு நீத்தம்! உரை' எனக் கழறி, |
|
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப் |
|
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி, |
|
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி, |
|
15 |
நயன் அறத் துறத்தல் வல்லியோரே, |
நொதுமலாளர்; அது கண்ணோடாது, |
|
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ, |
|
மாரி புறந்தர நந்தி, ஆரியர் |
|
பொன் படு நெடு வரை புரையும் எந்தை |
|
20 |
பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண் |
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ? |
|
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து, |
|
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை |
|
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர் |
|
25 |
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே! |
காமம் மிக்க கழி படர் கிளவியால், வரைவிடத்துக்கண், தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து, சொல்லியது. -இம்மென்கீரனார் | |
உரை |
மேல் |