- 170 -

படாமை-வெளிக்குத் தோன்றாவண்ணம், முன்போல்-பழைய படியே, இன்பச் சுற்றம் ஆயவர்கள்-இனிமை  விளைக்கின்ற பணிமகளிர் முதலிய பரிவாரத்தினர், சூழ - தன்னைச்சூழ்ந்திருக்க, இருந்த எல்லை - வீற்றிருந்த சமயத்தில்,  கற்றை

வார் குழலி-தொகுதியாய் நீண்ட கூந்தலையுடைய, மன்னன்மாதேவி - அரசன் பட்டமகிஷி (அமிர்தமதி), மரபின் - வழக்கம்போல், வருமுறைவந்து - வரும் முறைப்படிவந்து,  காவலன் பால்-அரசன்பக்கத்தில் (அர்த்தாசனத்தில்), மெல்ல இருந்தாள் - அமர்ந்திருத்தாள். (எ-று.)

மன்னன் பரிவாரஞ் சூழ இருந்த போது,  அரசிவந்து அவனருகில் இருந்தாளென்க.

மன்னன் அரசியின் ளவொழுக்கத்தைத்தானறிந்து வெளிப்படாதவாறு  அடக்கிக்கொண்டு  இருந்தானாகலின், அதனை ‘மறை'; என்றும், அதனை வெளிக்குக்காட்டினன் அல்லனாகலின், ‘புறப்பாடாமை'; என்றும் கூறினார்.  இனி, துறவுக்குச் செல்ல எண்ணியிருந்ததை‘மறை'; என்றார் எனவுமாம், மற்றை என்பதில், ஐ சாரியை.               (51)

இதுவுமது

125.  நகைவிளை யாடன் மேவி நரபதி விரகி னின்றே
  மிகைவிளை கின்ற நீல மலரினின் வீச லோடும்
  புகைகமழ் குழலி சோர்ந்து பொய்யினால்  மெய்யை வீழ்த்
  மிகைகமழ் நீரிற் றேற்ற மெல்லிய றேறி னாளே.    [தாள்.

(இ-ள்.) நரபதி - அரசன், விரகில் நின்று - தந்திரமாயிருந்து, மிகைவிளைகின்ற நகை விளையாடல் மேவி - மிகுதியாகின்ற புன்சிரிப்பொடு விளையாட்டை மேற்கொண்டு, நீலமலரினின் - கருங்குவளைப்பூவினால், வீசலோடும் - விளையாட்டாக அடித்தவுடனே, புகை கமழ் குழலி-அகிற்புகை மணக்குங் கூந்தலாளாகிய அமிர்தமதி, சோர்ந்து - (அதனைப் பொறாதவள் போல்) தளர்ந்து, பொய்யினால் - பொய் நடிப்பாக, மெய்யை வீழ்த்தாள் - (தன்) உடல் தரையிற்பட வீழ்ந்துவிட்டாள்;  மிகை கமழ்-அதிகமாகப் பரி