மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண் பிறையானைப்
பெண்ணொடா ணாகிய பெம்மானை இறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத் துறைவானை
யல்லதுள் காதென துள்ளமே. 1
நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம் உச்சியே புனைதல்வே டம்விடை
யூர்தியான் கச்சியே கம்பமே யகறைக் கண்டனை நச்சியே தொழுமின்நும் மேல்வினை
நையுமே. 2
பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி சீராலே பாடலா டல்சிதை வில்லதோர்
ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச் சேராதா ரின்பமா யந்நெறி சேராரே.
3
குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய் மின்றேய்க்கு
முகில்கள்தோ யும்வியன் கச்சியுள் மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பம்
சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே. 4
சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தம் கடையேபோய் மூன்றுங்கொண்
டான்கலிக் கச்சியுள் புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம் உடையானை யல்லதுள்
காதென துள்ளமே. 5
மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தம் கெழுவாளோ ரிமையாருச்
சியுமை யாள்கங்கை வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பம் தொழுவாரே விழுமியார்
மேல்வினை துன்னாவே. 6
விண்ணுளார் மறைகள்வே தம்விரித் தோதுவார் கண்ணுளார் கழலின்வெல்
வார்கரி காலனை நண்ணுவா ரெழில்கொள்கச் சிநக ரேகம்பத் தண்ணலா ராடுகின் றஅலங்
காரம்மே. 7
தூயானைத் தூயவா யம்மறை யோதிய வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம் மேயானை மேவுவா ரென்தலை மேலாரே.
8
|