பொருளி னோடுநற் சுற்றமும் பற்றிலர்க் கருளு
நன்மைதந் தாயஅ ரும்பொருள் சுருள்கொள் செஞ்சடை யான்கச்சி யேகம்பம் இருள்கெ
டச்சென்று கைதொழு தேத்துமே. 6
மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவந் தாக்கும் ஐவர்தம் ஆப்பை
அவிழ்த்தருள் நோக்கு வான்நமை நோய்வினை வாராமே காக்கும் நாயகன் கச்சியே கம்பனே.
7
பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை பெண்ணொ டாணென்று பேசற் கரியவன்
வண்ண மில்லி வடிவுவே றாயவன் கண்ணி லுண்மணி கச்சியே கம்பனே. 8
திருவின் நாயகன் செம்மலர் மேலயன் வெருவ நீண்ட விளங்கொளிச்
சோதியான் ஒருவ னாய்உணர் வாய்உணர் வல்லதோர் கருவுள் நாயகன் கச்சியே கம்பனே.
9
இடுகு நுண்ணிடை யேந்திள மென்முலை வடிவின் மாதர் திறம்மனம்
வையன்மின் பொடிகொள் மேனியன் பூம்பொழிற் கச்சியுள் அடிகள் எம்மை அருந்துயர்
தீர்ப்பரே. 10
இலங்கை வேந்தன் இராவணன் சென்றுதன் விலங்க லையெடுக் கவ்விர
லூன்றலும் கலங்கிக் கச்சியே கம்பவோ என்றலும் நலங்கொள் செல்வளித் தானெங்கள்
நாதனே. 11 |