|
ஒன்றகல
வெட்டெட்டா மோதுமடி யாரான்பாற்
றுன்றுமதி நாளினிது சொல்லவே - வென்றிதரும்
பொன்னிதிலி நாயகனார் பூமுடிமே லாடுதிருச்
சன்னிதிவி நாயனார் தாள். |
|
நிலைமண்டிலவாசிரியப்பா
|
|
தில்லைவா
ழந்தணர் திருவரு ளாலவர்
மல்குசீர்ப் பதத்தை மகிழ்வொடு வணங்கிக்
கடிதிரு நீல கண்டர்தை விசாகம்
வடிவியற் பகையார் மார்கழி யுத்திரம் |
|
|
5
|
வருமிளை
யான்குடி மாறரா வணிமகங்
கருதுமெய்ப் பொருளார் கார்த்திகை யுத்திரம்
விறன்மிண்ட கண்டர் மேடமா திரைநா
ளறனமர் நீதி யானிப் பூரம்
மாணெறி பத்தர் மாசியி லத்தங் |
|
|
10 |
காணுமே
னாதியார் கன்னியுத் திராட
மலர்கண் ணப்பர் மகாமான் றலையிற்
குலுவுகுங் குலியர் கோளரி மூலந்
தருமா னக்கஞ் சாறர்விற் சுவாதி
யரிவாட் டாயர்தை யாதிரை நாளி |
|
|
15
|
லானாயர்
கார்த்திகை யத்த நாளிற்
கான மூர்த்தியார் கடகத் தாரன்
முருகரிடப மூல மதனி
லுருத்திர பசுபதி யுயர்கன்னி முன்னாள்
பொருந்திரு நாளைப் போவார்கன் னியிற்பார் |
|
|
20 |
திருக்குறிப்
படியார் சித்திரைச் சுவாதி
சண்டீச ராமவர் தையுத்தி ரத்திற்
றண்டமி ழப்பர் தகரிற் சதயங்
குலச்சிறை நாயனார் கோளரி யனுட
மலகில் குறும்ப ராடியிற் சித்திரை |
|
|
25 |
யருள்கா
ரைக்கா லம்மைமீன் விளக்கா
மருகிலப் பூதிதை யதிற்சத யத்திற்
கமைநீல நக்கர் காளை மூலத்தி
னமிநந்தி யடிக ணாள்விடைப் பூச
ஞான சம்பந்தர் நாள்விடை மூல |
|
|
30 |
மான
கலிக்காம ரானி ரேவதியி |