viii
வாக்கினா லுரைக்குந் தொறுங்கணீர் மல்க மயிர்ப்புள குதிப்பமெய்
                                                விதிர்ப்பத்
தேக்குமா னந்த மிம்மையே யடையுந் திறத்தின்வீ றுறீஇச்சிறந் தன்றே.    2
 
உயர்சிவ ஞான போதநூற் பன்னி ரண்டெனுஞ் சூத்திரத் துட்கோள்
இயல்பெற விளக்கு மாதலா னிதுபன் னிரண்டெனுந் திருமுறை
                                               யெனல்நேர்
அயர்வற வீட்டி னூங்கிலை பேறு மதுதர விதிற்சிறந் ததுமின்
றுயல்பெறு வார்க்கீ தொன்றுமே சாலும் உண்மையை நோக்கிடி னம்மா.   3

 
அத்தகு பெருநூற் குரையெனப் பல்லோர் அறிந்தவா விரிப்பினு
                                                   மவற்றின்
வித்தக மனைத்துஞ் சித்திர வுருவின் விளக்கியெம் மனங்குடிப்  புகவே
பத்தியி னியல்பைச் சொன்முகம் விரித்துப் பற்பல நயப்பொருள் காட்டும்
இத்தகு முறையே யுரையிது நூலா சிரியனார் கருத்துமென் றியம்ப        4
 
யாம்புரி தவத்தாற் பெற்றன மிந்நாட் பின்வரு வோருமத் தகையர்
போம்புரி செய்தி முன்னவ ரிந்நூ னயந்தெரி தவம்புரி கிலராய்ச்
சாம்பின ரென்றென் றிரங்கிட வெம்மோர் தமக்கெலாந் தன்மதி
வளத்தா லாம்பரி சாய தமிழ்விருந் தீந்த வண்ணலை யாரறி யாரே,       5
 

கோவைவா யமுதப் பேரருட் செல்வி கொண்கனார்க் கேயுளங்
                                              கொடுத்தோன்
கோவைவா யமுதப் பேரருட் செல்வன் குலத்தினுஞ் சேக்கிழார்க்
                                                 குரியோன்
காவினீ டுறுகைக் கந்தசா மிப்பேர்க் கலைஞனீன் றெடுத்தகண்
                                                 மணியான்
மேவுநீ றணிசாந் தைந்தெழுத் துரையாய் விளங்குபூண் கொண்டகண்
                                                 மணியான்                      6

 
செப்பிர மணிய னன்பர்க ணேயன் றேக்கிய தமிழ்க்கட லொன்றோ
நப்பிர மணிய நூற்கலை மேற்கு நாட்டுரைக் கடலையுங் கடந்தோன்
விப்பிர மணியர் வாழ்தரு பேரூர்ப் பட்டிநா தன்கழல் விரும்புஞ்
சுப்பிர மணியப் பெயரினாற் றிசையும் விளக்கிடுந் தூயநற் சுடரே.       7


 சாத்துக்கவிகள்

கோ. தா. செட்டிபாளையம் - ரா. நஞ்சப்பகவுண்டர் குமாரரும், கந்தன்
சித்திர
பந்தனமாலை, கந்தன் வெண்பாமாலை, நால்வகைத் தோற்றத்தார்
நன்மகரா
நாடு அல்லது கொலை மறுத்தல் முதலிய நூலாசிரியரும் ஆகிய
R. N. கல்யாணசுந்தர கவுண்டர் இயற்றியது

அறுசீர் விருத்தம்

பொன்னாரு மார்பனயன் தினந்தேடிக் காணாத புனித மூர்த்தி
தன்னேரி றிருத்தொண்டு சார்ந்துசெயுஞ் சுந்தரனார் சாற்றி
                                             வைத்த
இன்னாருந் திருத்தொண்டத் தொகைவகையாய் விரிவாகி
                                      யிலங்கப் பூவில்
மன்னாருங் குன்றைநகர்ச் சேக்கிழார் திருமுறையாய் வகுத்த
                                             காதை.                1
 
அப்பெரிய காவியத்தின் பொருட்சுவையை யகிலத்தி லநேகம்
                                            போகள்
செப்பரிய விதத்தாலே தேர்ந்தார்க ளதற்கெல்லாஞ் சிறப்பா
                                    யோங்க ஒப்பரிய
பேருரையைக் கண்டதனை யெல்லார்க்கு மோதிப் பின்பிங்
                                         கிப்புவியில்
வெளியிடுவார்க் கியற்றுகிற கைமாறிங் சேதே காணேன்;       2