வாக்கினா
லுரைக்குந் தொறுங்கணீர் மல்க மயிர்ப்புள குதிப்பமெய்
விதிர்ப்பத்
தேக்குமா னந்த மிம்மையே யடையுந் திறத்தின்வீ றுறீஇச்சிறந் தன்றே. 2
|
|
உயர்சிவ ஞான
போதநூற் பன்னி ரண்டெனுஞ் சூத்திரத் துட்கோள்
இயல்பெற விளக்கு மாதலா னிதுபன் னிரண்டெனுந் திருமுறை
யெனல்நேர்
அயர்வற வீட்டி னூங்கிலை பேறு மதுதர விதிற்சிறந் ததுமின்
றுயல்பெறு வார்க்கீ தொன்றுமே சாலும் உண்மையை நோக்கிடி னம்மா. 3
|
|
அத்தகு
பெருநூற் குரையெனப் பல்லோர் அறிந்தவா விரிப்பினு
மவற்றின்
வித்தக மனைத்துஞ் சித்திர வுருவின் விளக்கியெம் மனங்குடிப் புகவே
பத்தியி னியல்பைச் சொன்முகம் விரித்துப் பற்பல நயப்பொருள் காட்டும்
இத்தகு முறையே யுரையிது நூலா சிரியனார் கருத்துமென் றியம்ப 4 |
|
யாம்புரி
தவத்தாற் பெற்றன மிந்நாட் பின்வரு வோருமத் தகையர்
போம்புரி செய்தி முன்னவ ரிந்நூ னயந்தெரி தவம்புரி கிலராய்ச்
சாம்பின ரென்றென் றிரங்கிட வெம்மோர் தமக்கெலாந் தன்மதி
வளத்தா லாம்பரி சாய தமிழ்விருந் தீந்த வண்ணலை யாரறி யாரே, 5
|
|
கோவைவா யமுதப்
பேரருட் செல்வி கொண்கனார்க் கேயுளங்
கொடுத்தோன்
கோவைவா யமுதப் பேரருட் செல்வன் குலத்தினுஞ் சேக்கிழார்க்
குரியோன்
காவினீ டுறுகைக் கந்தசா மிப்பேர்க் கலைஞனீன் றெடுத்தகண்
மணியான்
மேவுநீ றணிசாந் தைந்தெழுத் துரையாய் விளங்குபூண் கொண்டகண்
மணியான் 6
|
|
செப்பிர
மணிய னன்பர்க ணேயன் றேக்கிய தமிழ்க்கட லொன்றோ
நப்பிர மணிய நூற்கலை மேற்கு நாட்டுரைக் கடலையுங் கடந்தோன்
விப்பிர மணியர் வாழ்தரு பேரூர்ப் பட்டிநா தன்கழல் விரும்புஞ்
சுப்பிர மணியப் பெயரினாற் றிசையும் விளக்கிடுந் தூயநற் சுடரே. 7 |
கோ.
தா. செட்டிபாளையம் - ரா. நஞ்சப்பகவுண்டர் குமாரரும், கந்தன்
சித்திர
பந்தனமாலை, கந்தன் வெண்பாமாலை, நால்வகைத் தோற்றத்தார்
நன்மகரா
நாடு அல்லது கொலை மறுத்தல் முதலிய நூலாசிரியரும் ஆகிய
R. N. கல்யாணசுந்தர கவுண்டர் இயற்றியது