திருநின்ற சருக்கம் 77

 

ஐந்தாவது

திருநின்ற சருக்கம்

திருச்சிற்றம்பலம்

"திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
         திருநாவுக் கரையன்ற னடியார்க்கு மடியேன்;
 பெருநம்பி குலச்சிறைத னடியார்க்கு மடியேன்;
         பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்;
 ஒருநம்பி யப்பூதி யடியார்க்கு மடியேன்;
         ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்;
 அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்;
         ஆரூர னாரூரி லம்மானுக் காளே"

- திருத்தொண்டத்தொகை (4)

திருச்சிற்றம்பலம்