ஐந்தாவது திருநின்ற சருக்கம் திருச்சிற்றம்பலம் "திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்ற னடியார்க்கு மடியேன்; பெருநம்பி குலச்சிறைத னடியார்க்கு மடியேன்; பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்; ஒருநம்பி யப்பூதி யடியார்க்கு மடியேன்; ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்; அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்; ஆரூர னாரூரி லம்மானுக் காளே" - திருத்தொண்டத்தொகை (4) திருச்சிற்றம்பலம் |