76பெயர் விளக்கம்

 

யும் கடந்து கிழக்கே குடவாயில் மட்சாலையில் 1 நாழிகை அளவில் உள்ளது. குரவச்சேரி - குடவாயினின்றும் மேற்கே மட்சாலையில் 3 நாழிகை. பதிகம் 1. குறுந்தொகை.

6. கன்றாப்பூர் - மேற்படி காவிரிக்குத் தென்கரை 120-வது தலம். வைணவர் வீட்டில் வாழ்க்கைப்ப்ட்ட சைவப் பெண்ணுக்காகச் சிவபெருமான் பசுவின் கன்றுக்காக நட்டதறியினின்று வெளிப்பட்டருளிய தலம். இடும்பன் பூசித்த தலமென்பர். மாவூர் ரோட் நிலையத்தினின்று கிழக்கே கற்சாலையில் 2 நாழிகை திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதைச் சந்தியில் வடபுறம் உள்ள குன்னூரினின்று கிழக்கே 2 நாழிகையில் ஆதமங்கலத்தினின்றும் வடக்கே  நாழிகை. திருத்தாண்டகம்.

7. பயற்றூர் மேற்படி 78-வது தலம். பயற்றங்குடி என்று வழங்குவர். பைரவ மகா ரிஷி பூசித்த தலமென்பர் (வெட்டாறு) விற்குடி நிலையத்தினின்றும் வடகிழக்கே மட்சாலையில் 3 நாழிகையில் திருவிற்குடியினின்றும் கிழக்கே மட்சாலையில் 3 நாழிகை. பதிகம் 1. திருநேரிசை.

8. கொண்டீச்சரம் - மேற்படி 72-வது தலம். வில்வாரணியம் என வழங்குவார். அம்மை பசுவுருவிற் கொம்பினாற் கிளைத்தபோது இறைவர் வெளிப்பட்டனர் என்ப. திருமேனியில் வடு காண்க. கோயிலைச் சுற்றிப் பாற்றீர்த்தம் அகழி போலச் சூழும். சுவாமி பசுபதியார். அம்மை - சாந்தநாயகி. நன்னிலம் நிலையத்தினின்று மேற்கே கற்சாலையில் 1 நாழிகை. 2. நேரிசை - குறுந்தொகை.

9. பேரெயில் - மேற்படி 11-வது தலம். வங்காரம்பேரையூர் - ஓகைப்பேரையூர் என்று வழங்குவர். அக்கினி பூசித்த தலம். மாவூர் ரோட் நிலையத்தினின்று தென்மேற்கே மட்சாலை 3 நாழிகை. சுவாமி - ஜகதீசர். அம்மை - பெண்ணமிர்த நாயகி. பதிகம் 1. குறுத்தொகை.

10. திருக் கீழ்வேளூர் - IVம் பகுதி - பக்கம் 563ன் கீழ் தலவிசேடம் பார்க்க.

பிழை திருத்தம்

பக்கம்

வரி

பிழை

திருத்தம்


13

                                    10

வீண்குழை

வீன்குழை

18

                                    20

நிரனிரை

நிரனிறை

332

                                    37

அகரச் சுட்டு

அகரச் சுட்டுத்

377

                                    43

அந்தரத்த

சுந்தரத்த

384

                                    39

தெழுதருளி

தெழுந்தருளி

436

                                    29

2

6

500

                                    25

குறுந்தூரென

குறுந்தூறென

618

                                    15

வரையாய்

வரையாய்ப்