கிளியம்மா

சில நாள் பிரிவுக்கு பின்னர் ஒருவன் தன் காதலியைக் காணுகிறான். ஆசை மேலீட்டால் என்னென்னவோ பிதற்றுகிறான். அப்பிதற்றுதலில் எழுந்த பாடல் தான் இது.

கன்னங் கருத்த புள்ளே
கை மோதிரம் தோத்த புள்ளே
உள்ளங்கை தேனா
உருகரண்டி உன்னாலே
இடியிடித்து மழை பொழிய
இருண்ட வெள்ளம் திரண்டுவர
குடை பிடித்து நான் வருவேன்
குயிலாளே தூங்கிடாதே
ஓட்டைக் கரண்ட கமாம்
ஓசையிடும் வெண்கலமாம்-உன்
காட்டு மரிக் கொளுந்தை-கொஞ்சம்
காட்டி விட்டா லாகாதா?
ஆலமரத்தைப் பாரு
அடிமரத்து வேரப்பாரு
குண்டஞ் சம்பா நெல்லப் பாரு-
புள்ள கிளியம்மா
குட்டிபோர சோக்கப் பாரு-
போடு தின்னாக்கு
ஆத்துக்கு அந்தாண்ட
அத்தைமகள் ரெண்டு பேரு
கொட்ட மரம் வெட்டயிலே-
புள்ள கிளியம்மா
போட்டாண்டி பொட்டுத்தாலி-
போடு தின்னாக்கு
வட்ட வட்டப் பாறையிலே
வர கரிசித் தீட்டயிலே
ஆர் கொடுத்த சாயச் சீலே-
புள்ளக் கிளியம்மா
ஆலவட்டம் போடுதடி-
போடு தின்னாக்கு
கூடமேலே கூட வச்சு
கோயிலுக்கு போர பொண்ணே
கூடை அரப் பணமா?-உன்
கொண்டப் பூ காப்பணமா ?
சட்டி மேலே சட்டி வச்சு
சந்தைக்குப் போரப் புள்ளே
சட்டி அரப்பணமா? -உன்
சாமந்திப்பூ காப்பணமா?

வட்டார வழக்கு :

தோத்த-தோற்ற ;
வேரப்பாரு-வேரைப்பாரு ;
அந்தாண்ட-அந்தப் பக்கம் ;
பத்துலன்னு-பற்றவில்லை என்று ;
வெளுக்கரண்டி-உதைக்கிராண்டி.

சேரித்தவர்:
சந்திரன்

இடம்:
வாழப்பாடி,
சேலம் மாவட்டம்.