|
காதலி: |
கஞ்சிக் கலயம் கொண்டு
காட்டுக்கு
போகையிலே
கையலைச்சுக்
கூப்பிட்டது
காரணத்தைச் சொல்லு
மச்சான்
|
|
காதலன்: |
பேரீச்சம் பழமே
நீயே
பெரியடத்துக்
கிரீடமே
அஞ்சாறு ஆளோட-உன்ன
யாரை விட்டுக்
கூப்பிடட்டும்?
|
|
காதலி: |
மணந்திடுவேன்
என்றறு
சொல்லி
மாதக்
கணக்காயிருச்சு
கழுத்தில்
தாலி கட்ட லேனா-நான்
கயத்தப்
போட்டுச் செத்திடுவேன்
|
|
காதலன்: |
இடுப்பே ஒரு
பிடியே
இன்பமான
ரதி கிளியே
மதியான
கண்ணே-உன்ன
மறக்க
மனம் கூடலியே
|
|
காதலி: |
மாமன் மகனிருக்க
மாலையிடும் சாமியிருக்க
சொத்துக்
கையி சாமிபய
சொந்தமிண்ணு வாரானில்ல
|
|
காதலன்: |
காரமுள்ள சுண்ணாம்பாம்
கலயத்தில
நீத்தி வச்சேன்
நீத
மற்ற சிவகிரில
நிண்ணு போக
நேரமில்லை
|
|
காதலி: |
வெள்ளி நிலாவே,
நீயே
விடி நிலா ராஜாவே
கன்னி களவு
செய்ய
கண்
மறைஞ்சால் ஆகாதோ?
|
|
காதலன்: |
செவந்திப்பூப்போல உன் திரேகம்
வாழுத
வயதிலேயே
வாடி
பொண்ணே ஒடிப் போவோம்
இலுமிச்சங்கனி போல
இருவருமே ஒரு
செகப்பு
வாழுத
வயதிலேயே
வாடி பொண்ணே
ஓடிப் போவோம்
!
|