மூத்தவள் வாழ்ந்திருக்கும்போது அவள் கணவன் இளைய தாரத்தை
மணந்தான். பல நாட்களுக்குப்பின் மூத்த மனைவியைச் சந்திக்கிறான். அவர்களிடையே நடக்கும்
உரையாடல் வருமாறு:
கணவன்:
செம்புச் சிலை
எழுதி செவத்தப் புள்ள
பேரெழுதி வம்புக்கு
தாலி கட்டி வாழுறது எந்த விதம்?
மனைவி:
மாமன்
மகளிணுல்ல மறிச்சு
வச்சுத் தாலிக் கட்டி மந்தை
யோரம் வீட்டைக் கட்டி மாடடையப்
போட்டாரில்ல
கூடுணமே
ரெண்டு
பேரும் குமர கோயில் அன்னம் போல இன்னிப்
பிரிந்தாயனா இறப்பதும்
நிச்சயம் தான் என்னைய
விட்டுட்டு நீ இளையதாரம்
கட்டினியே போற வழியிலியே-உன்ன பூ நாகம்
தீண்டிராதோ?