|
ஒரு மச்சமுண்டு
காதலி மலைக்குப் புல்லறுக்கச் செல்லுகிறாள். அவன் விறகு வெட்ட
அதே பாதையில் செல்லுகிறான். இருவரும் எப்படியோ சேர்ந்து நடக்கிறார்கள். உள்ளத்தின்
உவகை பாட்டாக வெளிப்படுகிறது.
| ஆண்: |
கல்லருகாம், புல்லருகாம்
கடலருகாம் பூந்தோட்டம்
புல்லறுக்கப் போற பிள்ளை-நீ
பூமுடிஞ்சாலாகாதோ?
|
| பெண்:
|
நத்தத்து மேட்டு வழி
நான்
போறேன் ஒத்த வழி
பிச்சிச்சரம் போலே-நீ
பின்னே
வந்தாலாகாதோ?
|
| ஆண்:
|
கண்டாங்கிச்
சீல கட்டி
கரை வழியே போற
புள்ள,-உன்
கண்டாங்கிச்
சீலையிலே-நான்
வண்டாய்ச் சுழலுதனே
குளத்திலொரு
அல்லியுண்டு
கூந்தலொரு பாக
முண்டு
இடை சிறுத்த
அல்லிக்கு
இடையில் ஒரு மச்ச முண்டு |
வட்டார வழக்கு:
புள்ள-பிள்ளை.
|
சேகரித்தவர்:
S.M. கார்க்கி |
இடம்:
சிவகிரி. |
|