சோம்பேறி
“யாரோ உழைக்கிறார்கள், நான் சாப்பிடுகிறேன். எங்கேயோ நெல்
விளைகிறது. நெல் விளையும் ஊரின் ராஜா என் அப்பா. சீலை நெய்யும் ஊரில் இருப்பவள்
என் அம்மா. ஆடு மேய்ப்பவன் என் அண்ணன். பறவை சுடுவது என் தம்பி. இத்தனை பேரும் வேலை
செய்து ஒன்றொன்று கொடுத்தால் நான் ஏன் வேலை செய்ய வேண்டும்?” என்று கேட்கிறான்
சோம்பேறி. தன்னைத்தானே கேலி செய்து கொள்ளுவது போல செய்து கொள்ளுவது போல அமைந்துள்ளது
இப்பாடல்.
கட்டக் கட்ட புளியமரம் தென்புறத்திலே
காராங்கி நெல் விளையும் பட்டணத்திலே
பட்டணத்து ராசா எங்கையா
பாளையங் கோட்டை சீலைக்காரி எங்கம்மா
வெள்ளரிக்காக் கூடைக்காரி எங்கக்கா
வெள்ளாடு மேய்க்கிறது எங்கண்ணன்
சிட்டுக்குருவி தெரிக்கிறது என் தம்பி
சுட்டுச் சுட்டு திங்கிறது நான்தானே
சேகரித்தவர்:
S.S. போத்தையா |
இடம்:
பாளையங்கோட்டை. |
|