முன்னூறூம் பாடி
மூவணத் தேர் ஓடி
நானூறும் பாடி
நாக நாதர் ஓடி
ஐந்நூறும் பாடி
ஐயனார் தேரோடி
அறு நூறும்பாடி
ஆரணித் தேர் ஓடி
எழுநூறும் பாடி
இரணியந் தேர் ஓடி
எண்ணூறும் பாடி
ஈஸ்வரந் தேரோடி
தொளாயிரமும் பாடி
ஆயிரமாங் கோடி
ஆயிரத் தைச் சேர்த்து
கோபுரத்தைப் பார்த்து
கோபுரத்து மேலே
கும்பத்திலே தண்ணி
இஞ்சிக்கும் பாச்சி
எலுமிச்சைக்கும் பாச்சி
மஞ்சளுக்கும் பாச்சி
மற்படுதாம் வெள்ளம்
கைமாத்துக்காரர்
கச்சைக் கட்டும் தோழர்
நான் இரைத்த நேரம்
நீ இரைக்க வாடா
கை வழியே வாடா
கைவலியும் தீர
மேல் வழியே வாடா
மேல்வலியும் தீர
காளியாத்தா தாயே
கால்கள் வலியாமல்
மீனாட்சி அம்மா
மேலுவலியாமல்
கருப்பண்ண சாமி
கைகள் வலியாமல்
முத்து முனியாண்டி
உத்த துணை நீயே
ஏர்வாடி அல்லா
எனக்குத் துணை நீயே!
சேகரித்தவர்:
S.S. போத்தையா |
இடம்:
விளாத்திக்குளம்,
நெல்லை மாவட்டம். |
|