ஏற்றப் பாட்டு-2

வாரும் பிள்ளையாரே!
வழிக்குத் துணையாக,
வழிக்குத் துணையாக!
எனக்குப் பயம் தீர,
மூத்த பிள்ளையாரே!
முன்னடக்க வேணும்
முன் நடந்தாயானால்
மூணுடைப் பேன் தேங்காய்
இளைய பிள்ளையாரே
எண்ணித் தர வேணும்
எண்ணித் தந்தாயானால்;
என்னென்ன படைப்பேன்
பச்சரிசி தேங்காய்;
பயறு பலகாரம்
எள்ளுடன் துவரை ;
கொள்ளுடன் பயறு
அரிசி கலந்து ;
ஆயிரம் கலமாம்
துவரைக் கலந்து ;
தொளாயிரம் கலமாம்
எள்ளு கலந்து ;
எண்ணூறு கலமாம்
மொச்சை கலந்து ;
முன்னூறு கலமாம்
மூங்கில் களைபோல ;
முன்னூறு கரும்பு,
நாணல் தட்டை போல ;
நானூறு கரும்பாம்
அகத்திக் கம்பு போல ;
ஐநூறு கரும்பாம்.