வாலை முறுக்குதுபார் - வால்நுனி
வட்டம் சுழலுது பார்
சாலப் பதுங்குது பார் - நம்மீது
சாடவும் நோக்குது பார்
இடித்து முழங்குதடி - தொண்டையும்
இரும்பாலே செய்ததோடி
அடுத்து நெருங்காதேடி - அதுமிக
ஆங்காரம் கொள்ளுதடி.
தாலாட்டுப் பாட்டு, தலைமுறை தலைமுறையாகத் தமிழ்ப் பெண்கள் தம் குழந்தைகளுக்காகப்
பாடிவரும் குடும்பப் பாட்டு, அதற்குத் தேசிகவிநாயகம் பிள்ளை புதிய மெருகும் புதிய அழகும்
தந்து அதனிடையே உயர்ந்த நோக்கங்களையும் புகுத்தியுள்ளார்:
ஆராரோ ஆராரோ
ஆரிவரோ ஆராரோ
கல்லைப் பிசைந்து
கனியாக்கும் செந்தமிழ்
சொல்லை மணியாகத்
தொடுத்தவனும் நீதானோ?
|