நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5530
Zoom In NormalZoom Out


 

அதுவும்     பொறிநுதல்    வியர்த்தல்   போல்வனவற்றானன்றிப்  பிழம்புபற்றி உணரலாகாது;

3. வெறுப்பாவது: செறிவு; அதுவும் மக்கட்குணமாய் இசையாததொரு
மன நிகழ்ச்சியாதலிற் பொறியான் உணரலாகாது;

4. கற்பாவது:   தன்   கணவனைத்  தெய்வமென்று உணர்வதொரு
மேற்கோள்;

5.  ஏராவது:  எழுச்சி; அது எழுகின்ற நிலைமையென நிகழ்காலமே
குறித்து நிற்கும்.

6. எழிலாவது: அங்ஙனம் வளர்ந்தமைந்த பருவத்தும் இது வளர்ந்து
மாறியதன்றி இன்னும் வளருமென்பது போன்று காட்டுதல்;

7. சாயலாவது: ஐம்பொறியான் நுகரும் மென்மை;

8. நாணாவது: செயத்தகாதனவற்றின்கண் உள்ள மொடுங்குதல்;

9. மடனாவது: கொள்ளுத்தக்கொண்டு கொண்டது விடாமை;

10. நோயாவது: நோதல்;

11.   வேட்கையாவது:  பொருள்கண்மேல்  தோன்றும்  பற்றுள்ளம்;
‘செய்யுண்   மருங்கின்    வேட்கை’   (தொல்.எழுத்.   உயிர்மயங்.86)
என்புழி  அவாவிற்கு வேறுபாடு கூறினாம்;

12.   நுகர்வாவது:    இன்பதுன்பங்களை   நுகருநுகர்ச்சி;  ‘என்றா’
வென்பன எண்ணிடைச்சொல்;

என்று    வருங்கிளவி     -    ஒப்பு    முதல்  நுகர்வு  ஈறாகப்
பன்னிரண்டென்று அகப்பொருட்கண் வருங் கிளவிகளும்;

ஆவயின்  வருங்  கிளவி  -  அப்பன்னிரண்டின்   கண்ணே புறப்
பொருட் குரியவாய் அவ்வாசகத்தான் வருங் கிளவிகளும்;

ஆங்கு - ஈண்டு உவமவுருபு, அவை போல்வன கிளவி என்பதாம்;

எல்லாம்   நாட்டிய மரபின் நெஞ்சுகொளின் அல்லது - ஏனையவும்
நாடகவழக்கத்தாற் புலனெறி   வழக்கஞ்செய்த  முறைமையானே நெஞ்சு
உணர்ந்து கொள்ளினன்றி;

காட்டலாகப்  பொருள  என்ப  -  உலகியல்  வழக்கான்  ஒருவர்க்
கொருவர் கட்புலனாகக்  காட்டப்படாத பொருளைப் பொருளாகவுடைய
என்று கூறுவர் புலவர் எ-று.

இவை  மேல்வரும்   மெய்ப்பாடுபற்றி    உணர்தலிற் கட்புலனாகா
வோவெனின், மெய்ப்பாடாவது மனக்குறிப்பா