பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - கற்பு 207
 

      தலைமகன் ஏன்றுகொண்டு போமாறும்,

      அவர்களை இடைச்சுரத்துக் கண்டார் சொல்லும் வாய்பாடும்,
செவிலி பின்செல்லுமாறும்,

      பின்செல்ல இடைச்சுரத்துக் கண்டார் சொல்லும் முறைமையும்,
கண்டார் இடைச்சுரத்துத் தலைமகளது நிலைமையுரைத்து மீட்குமாறும்,
தலைமகன் மகிழ்ச்சியாமாறும்,

      தலைமகன் பொருள் முதலாயினவற்றிற்கு வரைவிடை வைத்துப்
பிரிந்தவழி, தலைமகளைத் தோழி ஆற்றுவிக்குமிடத்துத் தலைமகள்
தோழிக்குச்சொல்லுவனவும்,

      வரைவொடு புக்கவழித் தந்தையும் தன்னையன்மாரும் மறுக்குமாறும்,
அவ்வழி நற்றாய் அறத்தொடு நிற்குமாறும்,

      கற்புக்காலத்துத் தலைமகன் தலைமகளைப் பிரியும் பிரிவென்று
சொல்லப்பட்ட பிரிவும்,

      பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாளாகத் தோழி வற்புறுத்தனவும்,
பருவங்காட்டினவும்,

      தலைமகன் வினைமுற்றுவித்து வந்தவாறும்,

      அஃதுணர்ந்த தோழி சொல்லினவும்,


      தலைமகன் வினைமுற்றினான் தேர்ப்பாகர்க்குச் சொல்லினவும்,
முகிலுக்குச் சொல்லினவும்,

      தலைமகன் தலைமகளுடனிருந்து தோழி கேட்பச் சொல்லினவும்,

      மற்றும் பரத்தையிற் பிரிவின்கண் துனியும் புலவியூடலும் அவற்றது
விகற்பமும்,

      பரத்தையிற் பிரிந்த தலைமகற்குத் தலைமகள் வாயின்மறுத்தனவும்,

      வாயில்வேண்டிப் பாணன் முந்துறுத்தனவும்,

      விருந்து முந்துறுத்தனவும்,
 

      வாயில் பெற்றுப் புக்கனவும், மற்றும் பிறவுமெல்லாம் இதுவே ஓத்தாகத்
தந்துரைக்க.                                                   (26)