மொழி நடை யெழுதல் அரிதெனக் கிளத்தல்
‘அண்ணல் நெடுந்தேர் அரிகே சரியகன்
ஞாலமன்னாள்
வண்ணம் ஒருவா றெழுகினும் மாமணி வார்ந்தனைய
தண்ணென் கருங்குழல் நாற்றமும் மற்றவள் தன்னடையும்
பண்ணென் மொழியும் எழுத உளவே படிச்சந்தமே’
(82)
‘களிசேர் களிற்றுக் கழல்நெடு மாறன்கடையல்
வென்ற
தெளிசேர் ஒளிமுத்த வெண்குடை மன்னன்தென் னாடனையாள்
கிளிசேர் மொழியும் கருங்குழல் நாற்றமுங் கேட்பினைய
எளிதே எழுத எழுதிப்பின் ஊர்க எழில்மடலே.’
(83)
‘அல்லதூஉம், எழுதுஞான்று இங்ஙனமோ நீர் எழுதுவது?’ என்று
சொல்லும்; அதற்குச் செய்யுள்:
அவயவமெழுதல் அரிதெனக் கிளத்தல்
‘விற்றான் எழுதிப் புருவக் கொடியென்றிர்1
தாமரையின்
முற்றா முகைநீர் எழுதி முலையென்றிர் மொய்யமருட்
செற்றார் படச்செந் நிலத்தைவென் றான்தென்னன் கூடலன்னாள்
சொற்றான் எனக்கிள்ளை யோநீர் எழுதத் துணிகின்றதே.’
(84)
அதுகேட்டுத் தலைமகன் பெயர்த்தும் ஆற்றானாம்; ஆக இனி
இறந்துபடல் ஆகாதென்று, ’நீர் இந்நீரராகன்மின், நுமக்கு இக்குறை
முடித்துத் தருவன்; நும்மாற் கருதப்படுவாள் என்மாட்டுப் பெரிதும்
அருளுடையவ ளாயினாள்’ என்னும்; அதற்குச் செய்யுள்:
உடம்பட்டு விலக்கல்
‘ஓங்கும் பெரும்புகழ்ச் செங்கோல்
உசிதன் உறுகலியை
நீங்கும் படிவென்ற கோன்வையை வாய்நெடு நீரிடையான்
தாங்கும் புணையொடு தாங்குதண் பூம்புனல் வாயொழுகின்
ஆங்கும் வருமன்ன தாலின்ன நாளவள் ஆரருளே’
(85)
‘காடார் கருவரை யுங்கவி வானுங் கடையலன்று
கூடார் செலச்செற்ற கோன்நெடு மாறன்தென் கூடலன்ன
ஏடார் மலர்க்குழ லாளெங்கு நிற்பினும் என்னையன்றி
ஆடாள் புனலுமெல் ஊசலும் ஈதவள் ஆரருளே’
(86)
‘தலைப்புணைக் கொளினே தலைப்புணைக்
கொள்ளும்
கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும்
புணைகை விட்டுப் புனலோ டொழுகின்
(பாடம்) 1. மென்மரையின்.
|