இதனுள் கொள்வரார்ப்பினும் பெரிதெனவே நாண் நீங்கிப் புலப்படுத்தலை மகிழ்ந்தவாறு காண்க. |
சிறந்த புதல்வனை நேராது புலம்பினும் - யாரினுஞ் சிறந்த புதல்வனை வாயிலாகக் கொண்டு சென்றுழி அவற்குந் தலைவி வாயில் நேராமல் தலைவன் வருந்தினும். |
உதாரணம்: |
“பொன்னொடு குயின்ற பன்மணித்தாலித் தன்மார்பு நனைப்பத்தன்றலையுமிஃதோ மணித்தகைச் சாந்தம் புலர்தொறுநனைப்பக் காணாயாகலோ கொடிதே கடிமனைச் சேணிகந்தொதுங்கு மாணிழையரிவை நீயிவணேராவாயிற்கு நாணுந் தந்தையொடுவருவோன்போல மைந்தனொடு புகுந்த மகிழ்நன்மார்பே” |
மாண்நலம் தா என வகுத்தற் கண்ணும் - இவள் இழந்த மாட்சிமைப்பட்ட நலத்தைத் தந்து இகப்பினும் இகப்பாயெனத் தலைவனை வேறுபடுத்தற்கண்ணும். |
உதாரணம்: |
“யாரை யெலுவ யாரே நீயெமக் கியாரையு மல்லை நொதுமலாளனை யனைத்தாற் கொண்க வெம்மிடையே நினைப்பில் கடும்பகட் டியானை நெடுந்தேர்க்குட்டுவன் வேந்தடுமமயத்து முரசதிர்ந்தன்ன வோங்கற் புணரி பாய்ந்தாடு மகளி ரணைந்திடுபல்பூ மரீஇயாங்கு வாபுலம் புகுதரு பேரிசைமாலைக் கடல்கெழு மரந்தையன்னவெம் வேட்டனையல்லையா னலந்தந்து சென்மே”1 |
(நற் - 395) |
எனவரும். |
1. பொருள் ; எலுவ! யார் நீ! நீ எமக்கு என்ன உறவு? யாதோர் உறவும் இல்லை; நொதுமலன் நீ. அவ்வளவே நம்மிடையேயுள்ள உறவு. குட்டுவனின் போரில் எழும் முரசு போல ஒலியுண்டாக மலைச் சுனையில் பாய்ந்து |