பக்கம் எண் :

182தொல்காப்பியம் - உரைவளம்
 

புனையிருங் கதுப்பின் நீகடுத் தோள்வயின்
அனையேன் ஆயின் அணங்குக என்என
மனையோள் தோற்று மகிழ்நன் ஆயின்
யார்கொல் வாழிதோழி நெருநல்
தார்பூண் களிற்றில் தலைப்புணை தழீஇ
வதுவை யீரணிப்பொலிந்த நம்மொடு
புதுவை வந்த காவிரிக்
கோடுதோய் மலர்நிறை யாடியோரே”
1

(அகம்-166)
  

என்றும் வரும். இவை தலைவனை இகழ்ந்தன.
  

“அளியர் தாமே மகிழ்நன் பெண்டிர்
தாமவற் பிணித்தல் தேற்றார் நாமழச்
செய்தார் அகலம் வவ்வினர் இவரென
எம்பழி அறையுநர் போலத்
தம்பழி தூற்றும் பெரும்பேதையரே”
2
  

“எரிஅகைந் தன்ன தாமரைப் பழனத்துப்
பொரிஅகைந்தன்ன பொங்குபல சிறுமீன்
வெறிகொள் பாசடையுணீ இயர்பைப்பயப்
பறைதபு முதுசிரல் அசைபு வந்திருக்குந்
துறைகேழ் ஊரன் பெண்டுதன் கொழுநனை
நம்மொடு புலக்கும் என்ப நாமது


1. பொருள்: கள்மிக்க சாடியில் முகக்குங்   கோய்   என்னும் கலம் பொத்துதலால் கள்ளானது மழைத்
துளிபோலத் தெருவில் துளிக்கும்படியான பலவகை நெற்களையுடைய வேளூர்வாயிலிடத்து, பூமாலையில்
வண்டு  மொய்க்காது கழியும்படியான பலிபெறும்  தெய்வமானது  நான்  நீ  ஐயுறும்  பரத்தையுடன்
புனலாடினேனாயின் என்னை வருத்துவதாக  என்று  தன் மனைவியைத் தலைவன் தேற்றுவானாயின்,
நேற்று  திருமண அணியுடன்  பொலிந்த  நம்மோடு  காவிரிப்  புது  வெள்ளத்தில்  களிறுபோலும்
தெப்பத்தைத் தழுவி நீராடியோர் யார் தாம்? அத்தலைவன் அல்லனோ? - இது உழையோர் கேட்கப்
பரத்தை கூறியது.

2. பொருள்:  மகிழ்நனின்   பெண்டிர்  இரங்கத்தக்காராவர்.  அவனை  நம்பால்  வராமற்  பிணிக்கத்
தெளியாராய்  நாம் அழும்படிச்  செய்தாராகிய  தலைவன்  மார்பை இப்பரத்தையர் வவ்வினர் என்று
எம்மைப் பழிதூற்றுவார் போலத் தம்பழியையே பெரிய அறியாமையுடையர்.