பக்கம் எண் :

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

உரைவளம்


கற்பியல்

கற்பு
  

140.

கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழவத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே
(1)
 

பிற்கால இலக்கண நூல்கள்
  

நம்பி அகப்பொருள் 171
  

வரைவு எனப்படுவது உரவோன் கிழத்தியைக்
குரவர் முதலோர் கொடுப்பவும் கொடாமையும்
கரணமொடு புணரக் கடியயர்ந்து கொளலே.

  

இலக்கண விளக்கம் 528
  

மாறன் அகப்பொருள் 63
  

வரைவு எனப்படுவது புரைதீர் கிழவோன்
உரைமலி கற்பின் உத்தமக் கிழத்தியைத்
தந்தையாய் மாதுலன் தம்முன் தமரொடும்
முந்திய ஆசான் முதலோர் கொடுப்பக்
கரணம் வழுவாது கடியயர்ந்து கொளலே.