பக்கம் எண் :

14தொல்காப்பியம் - உரைவளம்
 

இதனானே     இயற்கைப்  புணர்ச்சிக்கண்  மெய்யுறு  புணர்ச்சியையும் உள்ளப் புணர்ச்சியென்று கூறி
அதன்  வழிக் கற்பு நிகழ்ந்த தென்றுங் கூறவும் படும். இவ்வாசிரியர் ஆதியூழியின் அந்தத்தே இந்நூல்
செய்தலின்  முதனூலாசிரியர் கூறியவாறே களவு நிகழ்ந்த பின்னர்க் கற்பு நிகழுமாறுங் கூறித் தாம் நூல்
செய்கின்ற  காலத்துப்  பொய்யும் வழுவும் பற்றி இருடிகள் கரணம் யாத்தவாறுங் கூறினார். அக்களவின்
வழி நிகழ்ந்த கற்புங் கோடற்கென்று உணர்க.
  

*உதாரணம்
  

“மைப்புறப் புழுக்கி நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்
புள்ளுப்புணர்ந்தினிய வாகத் தெள்ளொளி
யங்கணிரு விசும்பு விளங் கத்திங்கட்
சகடம் வேண்டிய துகடீர் கூட்டத்துக்
கடிநகர் புனைந்து கடவுட் பேணிப்
படுமண முழவொடு பரூஉப் பணையிமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
பூக்கணு மிமையோர் நோக்குபு மறைய
மென்பூவாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று குறிக்கும் பயம் பமலறுகைத்
தழங்குரல் வானந் தலைப் பெயற்கீன்ற
மண்ணு மணியன்ன மாயிதழ்ப் பாவைத்
தண்ணறு முகையொடு வெண்ணூல் சூட்டித்
தூவுடைப் பொலிந்து மேவரத்துவன்றி
மழைபட்டன்ன மணன் மலிபந்த
ரிழையணி சிறப்பிற் பெயர் வியர்ப் பாற்றித்
தமர் நமக்கீந்த தலைநாளிரவி
னுவர் நீங்கு கற்பினெ முயிருடம் படுவி
முருங்காக் கலிங்க முழுவதும் வளைஇப்
பெரும் புழுக் குற்றநின்பிறை நுதற் பொறிவிய
ருறுவளி யாற்றச் சிறுவரை திறவென
வார்வநெஞ்சமொடு போர்வை வௌவலி
னுறைகழி வாளி னுருவு பெயர்ந்திமைப்ப
மறைதிறனறியாளாகி யொய்யென
நாணினளிறைஞ்சி யோளே பேணிப்
 


* இப்பாடலில் ஆரியச்சடங்கு யாதொன்றும் இல்லாமையும் தமிழ்ச் சடங்கேயுள்ளமையும் காண்க.