தூது விட்டது வந்துழிக் காண்க. |
“பதுக்கைத் தாய வொதுக்கருங் கவலைச் சிறுகண் யானை யுறுபகை நினையா தியாங்கு வந்தனையோ பூந்தார் மார்ப வருள்புரி நெஞ்ச முய்த்தர விருள்பொர நின்ற விரவினானே”1 |
(ஐங்குறு - 362) |
இது, சேணிடைப்பிரிந்து இரவின்வந்துழிக் கூறியது. |
“ஆமா சிலைக்கு மணிவரை யாரிடை யேமாண் சிலையார்க்கினமா விரிந்தோடுந் தாமாண்பில் வெஞ்சுரஞ் சென்றார் வரக்கண்டு வாய்மாண்ட பல்லி படும்.”2 |
(கைந்நிலை - 18) |
இது, நிமித்தங் காட்டிக் கூறியது. |
இன்னும் அதனானே நமர் பொருள் வேண்டுமென்றார். அதற்கு யான் அஞ்சினேனெனக் களவின் நிகழ்ந்ததனைக் கற்பில் தலைவிக்குக் கூறுதலுங் கொள்க. |
“கன்னவி றோளான் கடிநாள் விலக்குதற் கென்னை பொருணினைந்தா ரேந்திழாய் - பின்ன ரமரேற்றுக் கொள்ளு மென்றஞ்சினே னஞ்சார் நமரேற்றுக் கொள்ளாத ஞான்று.”3 |
இன்னுந் தோழி கூற்றாய்ப் பிறவற்றான் வருவனவெல்லாம் இதனான் அமைக்க. |
1. பொருள்: பூந்தார் மார்ப! கற்குவியல்களையுடையதாகிய செல்லுதற்கரிய கவர்த்த வழியில் சிறிய கண்ணையுடைய யானையாகிய பகையைக் கருதாமல் எம்மிடத்து அருள்மிக்க மனது செலுத்த இருட்டு மிகத்தாக்கும் இரவில் எவ்வாறு தந்தாய்! 2. பொருள்: பக்கம் 156 - 157ல் காண்க 3. பொருள் : தோழீ! கற்போலும் தோளானாகிய தலைவனுடன் நம் திருமண நாளை விலக்குவதற்காக என்ன காரணம் கருதினரோ தெரியவில்லை. அவர் மறுத்த பின்னர் தலைவரை நமர் ஏற்றுக் கொள்ளாத நாளில் தலைவர் அமர் ஏற்று வருவாரோ என அஞ்சினேன். |