பக்கம் எண் :

கற்பியல் சூ.10181
 

இனையரென உணர்ந்தாரென்றேக் கற்றாங்குக்
கனவினா னெய்திய செல்வத் தனையதே
ஐய எமக்கு நின்மார்பு”
  

இது மூவகையார்க்கும் பொது”1     (கலித்-68)
  

இல்லோர்  செய்வினை2  யிகழ்ச்சிக்  கண்ணும்  என்பது-மனையகத்தோர் செய்த வினையை யிகழ்ந்து
கூறுதற் கண்ணும் என்றவாறு.
  

பன்மையால்3 தலைமகனை யிகழ்தலுந் தலைமகளை யிகழ்தலுங் கொள்க.
  

உதாரணம்:
  

“கழனிமாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூ உம் ஊரன்
எம்மிற் பெருமொழி கூறித்தம்மிற்
கையுங் காலும் தூக்கத் தூக்கும்
ஆடியிற் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே”
4

(குறுந்- 8)
  

என்றும்
  

“நன்மரங் குழீஇய நனைமுதிர்சாடிப்
பன்னாள் அரித்த கோஒய் உடைப்பின்
மயங்கு மழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும்
பழம்பல் நெல்லின் வேளூர்வாயில்
நறுவிரை தெளிந்த நாறிணர்மாலைப்
பொறிவரி இனவண்டூதல கழியும்
உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம்


1. மூவகையார் - காமக் கிழத்தியர் மூவகையார்.

2. இல்லோர் - இல்வாழ்க்கையினராகிய தலைவனும் தலைவியும், செய்வினை - ஊடல் கூடல் முதலியன.

3. பன்மையான்-இல்லோன்   என்றோ   இல்லோள்  என்றோ  கூறாது  ‘இல்லோர்’ என்று  பன்மையாற்
கூறியதனால்.

4. பொருள்:  வயல் வரம்பில் உள்ள மாமரத்தின் முதிர்ந்து வீழும் பழத்தைப் பழனத்தில் உள்ள வாளை
மீன்  கவரும்  படியான ஊரனானவன் எம் வீட்டில் எம்மைப் பெருமைப்படுத்தும் மொழிகளைக் கூறித்
தம்  வீட்டில்  முன்  நிற்பார்  கையும்  காலும்  தூக்கத் தானும்  தூக்கும்  கண்ணாடியிற்  றோன்றும்
பாவைபோலத் தன் புதல்வனுக்குத் தாயாகிய அவள் விருப்பப்படியே அவள் விரும்பியவற்றைச் செய்து
ஒழுகுவானாயினான்.