1. இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் கற்பெனப் படுவது எனக் கூட்டுக. 2. “கொடுப்போர் இன்றியும்.....காலையான.....கற்பாகுமோ எனின்” என்னும் இவ்வரிகள் தேவையில்லா இடைச் செருகலாகும். நீக்கித் தொடர்க. இது கற்பாகுமோ எனின் என ஒருமையாற் கூறிப் பின்னர் அவையும் எனப் பன்மையால் கூறுவது தவறு. அதனால், “அஃதேல்.....கொள்க. அவையும் கற்பாதல்” எனத் தொடர்க. 3. கற்புணர்த்தினமையின்-கற்பிலக்கணம் உணர்த்தினமையின். |