உ கணபதி துணை புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்கடவுள் வாழ்த்து 1 | நடையூறு சொன்மடந்தை நல்குவது நம்மேல் இடையூறு நீங்குவது மெல்லாம்-1புடையூறும் சேனைமுகத் தாளிரியச் சீறுமுகத் தூறுமதத் தானைமுகத் தானை நினைத் தால். | 2 | கண்ணவனைக் காண்கவிரு காதவனைக் 2கேட்கவாய்ப் பண்ணவனைப் பாட பதஞ்சூழ்க-எண்ணிறைந்த நெய்யொத்து நின்றானை நீலமிடற் றானையென் கையொத்து நேர்கூப்புக. |
சிறப்புப் பாயிரம் | 3மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன் தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் | 5 | பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு 4 படலமும் பழிப்பின் றுணர்ந்தோன் ஓங்கிய சிறப்பி னுலகமுழு தாண்ட வாங்குவிற் றடக்கை வானவர் மருமான் |
3. 1-4. " அகத்திய னென்னும், அருந்தவ முனிவ னாக்கிய முதனூல், பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர், நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்" (பன்னிரு.) 1-6. " இனிப் பன்னிருபடல முதனூலாக வழிநூல் செய்த வெண்பாமாலை ஐயனாரிதனாரும் இது கூறினார்; என்னை ? 'மன்னிய ......பகர்ந்த' எனப் பாயிரஞ் செய்தற்குடம்பட்டமையினென்பது" (தொல்.மரபு. சூ.94,பேர்.)
(பிரதிபேதம்) 1. "புடையூறு" 2. "கேட்கவாய் பண்ணவனைப் பாடப்பதஞ்" 4. "படலம்" |